அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (USCIS) அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, உயர்கல்வி பெற்ற வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்கா வந்து பணியாற்ற மிகவும் முக்கியமான H-1B விசா லாட்டரி விண்ணப்பங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40% அளவு குறைந்துள்ளது.
H-1B விசா பெற இந்திய ஐடி ஊழியர்கள் தவமாய் தவம் கிடக்கும் வேளையில், H-1B விசா லாட்டரி விண்ணப்பங்களின் எண்ணிக்கை 40% குறைந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே உள்ளது. இந்த சரிவுக்கு என்ன காரணம் என்றும் USCIS அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

USCIS அமைப்பு இந்த ஆண்டு பல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் லாட்டரி சிஸ்டத்தை ஏமாற்றும் முயற்சிகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதன் விளைவாக விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என கூறப்படுகிறது. ஒருவரே ஒன்றுக்கும் அதிகமான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் லாட்டரி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் இத்தகைய பணிகள் நடக்கிறது.
மார்ச் மாத இறுதியில் நடந்த ஹெச்1பி விசா லாட்டரியில், அமெரிக்க அரசு சுமார் 470,342 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் 758,994 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில் 38% குறைவு.
விண்ணப்பிக்கும் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் நிலையாகவே உள்ளது. அதாவது இந்த ஆண்டு சுமார் 442,000 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர், கடந்த ஆண்டு 446,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனால் விண்ணப்பம் செய்தோர் எண்ணிக்கையில் மாற்றமில்லை, விண்ணப்பத்தின் எண்ணிக்கையில் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
அமெரிக்க அரசு உலக நாடுகளில் இருக்கும் திறமையான ஊழியர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது தான் H-1B விசா திட்டம். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை உள்ள துறைகளில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற பணியாளர்களை ஈர்ப்பதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ், அமேசான், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், மெட்டா மற்றும் கூகுள் உள்ளிட்ட டாப் தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசாவை பெறும் வாடிக்கையாளர்களில் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications