வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு டெக் நிறுவனங்களும் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதற்கு ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன. இப்படி அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் வேலைக்கு சென்று இருப்பவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் .
டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசாவுக்கான ஆண்டு கட்டணத்தை ஒரு லட்சம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் என உயர்த்தி இருக்கிறது. எனவே இனி ஒரு நபரை ஹெச்1பி விசாவில் அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு பணிக்கு அமர்த்த வேண்டும் என்றால் அதற்காக ஆண்டு கட்டணமாக ஒரு லட்சம் டாலர்களை செலுத்த வேண்டியிருக்கும்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கும் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் கூடுதல் செலவை ஏற்படுத்தும். டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க டெக் உலகமே பரபரத்துக் காணப்படுகிறது . இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் திடீரென ஒரு மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறது.
ஹெச்1பி விசாவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு தற்போது வெளிநாட்டுக்கு சென்று இருக்கக்கூடிய அனைத்து ஊழியர்களும் நாளைக்குள் அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என கூறியிருக்கிறது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் ஹெச்1பி மற்றும் ஹெச் 4 விசாவில் வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவரும் நாளைக்குள் அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
டிரம்பின் ஹெச்1பி விசா கட்டணம் இந்திய டெக் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், மெடா ஆகிய முன்னணி டெக் நிறுவனங்கள் திறன் மிகு இந்திய ஊழியர்களை பணிக்கு அமர்த்த ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் டெக் நிறுவனங்கள் இனி அவர்களுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதாவது ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 88 லட்சம் ரூபாயை விசா கட்டணமாக மட்டுமே செலுத்த வேண்டும். இது நிறுவனங்களின் செலவை அதிகப்படுத்தும். எனவே மிக அவசியமாக இருந்தால் மட்டுமே ஹெச்1பி விசாவில் ஊழியர்களை வெளிநாட்டில் இருந்து வேலைக்கு அமர்த்துவார்கள். எனவே தானாகவே அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகள் சென்றுவிடும்.
மைக்ரோசாப்ட் போலவே அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் ஹெச்1பி விசாவில் அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்ட ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது , வெளியில் இருப்பவர்களும் செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. இது தாய்நாடு மற்றும் வேறு நாடுகளுக்கு சென்றிருக்க கூடிய ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் பயண திட்டங்களை ரத்து செய்து அவர்கள் உடனே அமெரிக்கா திரும்ப வேண்டும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications