ராஜஸ்தான்: பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு வெற்றி கதை தான் இது. ஹல்திராம்ஸ் இந்தியர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒரு தின்பண்ட பிராண்ட்.
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தொடங்கி எங்கு சென்றாலும் ஹல்திராம்ஸின் தின்பண்டங்களை நம்மால் காண முடியும். ஒரு சிறிய கடையாக தொடங்கப்பட்ட ஹல்திராம்ஸ் எப்படி மிகப்பெரிய பிராண்ட் ஆக மாறியது என்பதன் சுவாரசியமான கதையை இங்கே நாம் பார்க்கலாம்.

1937 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் கங்கா பிஷன் அகர்வால் என்பவர் தன்னுடைய அத்தையிடமிருந்து தின்பண்டங்கள் தயாரிப்பதை கற்றுக் கொள்கிறார். அவ்வாறு தான் கற்றுக்கொண்ட தின்பண்டங்களை அவர் மக்களுக்கு விற்பனை செய்ய தொடங்குகிறார்.
தன்னுடைய தின்பண்டங்களுக்கு "டங்கர் சேவ்" என பெயரிடுகிறார். இதன் மூலம் அந்த பகுதியில் பிரபலமாகும் கங்கா பிஷன் அகர்வாலை அப்பகுதி மக்கள் ஹல்திராம் என அழைக்கின்றனர். பின்னாளில் இந்த பெயரிலேயே ஒரு கடையை தொடங்குகிறார் அகர்வால். இவர் கடையில் கிடைக்கும் பூஜியாவிற்கு ராஜஸ்தான் முழுவதும் ரசிகர்கள் கிடைக்கின்றனர்.
தொடக்கத்தில் ஒரு கிலோ பூஜியா 2 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டிமாண்ட் அதிகரிக்க அதிகரிக்க விலை 25 பைசா என மாறுகிறது. இப்படி படிப்படியாக தொழில் விரிவடைந்து ராஜஸ்தானின் பல பகுதிகளில் ஹல்திராம்ஸ் ஸ்னேக்ஸ் கடை திறக்கப்படுகிறது. இதனை அடுத்து கொல்கத்தா,நாக்பூர், டெல்லி என இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடைகள் நிறுவப்படுகின்றன.
ஹல்திராம்ஸின் வெற்றிக்கு காரணம், பாக்கெட்டுகளில் தின்பண்டங்களை அடைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உணவகங்களிலும் விற்பனை செய்ய தொடங்கியது தான். இதற்காக முக்கிய நகரங்களில் இவர்கள் ஆலைகளையும் நிறுவினர்.
இனிப்பு, காரம், ரெடி டு ஈட் வகையிலான பொருட்கள் என 500 வகையான பொருட்களை தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், அமெரிக்கா ,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தின்பண்டங்கள் மிக ஜோராக விற்பனையாகி வருகின்றன. தற்போது பிரிட்டானியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஹல்திராம்ஸும் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
2024 ஆம் நிதியாண்டில் 14,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது இந்த நிறுவனம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களின் வணிகம் ஆண்டுதோறும் 18 சதவிகிதம் என வளர்ச்சியை கண்டுள்ளது. பொதுவாக இவர்கள் தங்களது தயாரிப்புகளில் 14 முதல் 15 சதவீதம் வரை லாபம் காண்கிறார்கள்.
தற்போது இந்திய உலகின் முக்கிய ஈக்விட்டி ஃபண்ட் நிறுவனங்களான பிளாக் ஸ்டோன் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் ஹல்திராம்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு தயாராகி வருகின்றன. நிறுவனத்தில் உள்ள 70% பங்குகளை இந்த நிறுவனங்கள் வாங்க தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் மதிப்பு என்பது 70 ஆயிரம் கோடிகள் வரை உயரக்கூடும் என எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் டாடா குழுமம் இதனை வாங்க முயற்சி செய்தது ஆனால் அந்த வாய்ப்பு தவறிப்போனது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications