ஹரியானா: இந்தியாவில் தற்போது பல்வேறு இளைஞர்களும் வேலைக்கு செல்வதை தாண்டி சுயமாக தொழில் செய்து முன்னேறி விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். அப்படி சுயதொழில் செய்ய விரும்பும் பலருக்கும் காளான் வளர்ப்பு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் காளான் வளர்ப்பில் ஆண்டுக்கு 2.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் இருக்கும் சலேம்கர் கிராமத்தை சேர்ந்த 26 வயதான இளைஞர் விகாஷ் வர்மா. இவருடைய குடும்பமே பாரம்பரியமாக விவசாய பணிகளில் தான் ஈடுபட்டு வந்திருக்கிறது. இவருடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் கோதுமை, பஞ்சு உள்ளிட்டவற்றை வேளாண்மை செய்து வந்தனர். இருந்தாலும் குடும்பத்திற்கு தேவையான செலவுகளுக்கு கூட விவசாயத்திலிருந்து அவர்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை.

இதனால் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்த விகாஷ் காளான் வளர்ப்பு பற்றி தெரிந்து கொண்டாராம் . மாநில வேளாண் துறை சார்பாக நடத்தப்பட்ட காளான் வளர்ப்பு வகுப்புகளில் கலந்து கொண்டாராம், இதனை எடுத்து பல்வேறு இடங்களுக்கும் சென்று காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து இதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன எப்படி எல்லாம் அவற்றை கடந்து வர வேண்டும் என கற்றுக் கொண்டார்.
காளான் வளர்ப்பிற்கு ஏசி தேவை ஆனால் அதற்கு ஏற்ற நிதி தன்னிடம் இல்லை எனவே குளிர்ச்சியான சூழலில் காளான் வளர்க்க மூங்கிலை கொண்டு வித்தியாசமான கூரை வீட்டை அமைத்தார். ஸ்மார்ட்டான முறையில் இரண்டு குடிசைகளை உருவாக்கி அதில் காளான் வளர்க்க தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் இவருக்கு காளான் வளர்ப்பில் எந்த லாபமும் கிடைக்கவில்லை மாறாக நஷ்டம் தான் அடைந்திருக்கிறார்.
தன்னுடைய தவறுகளில் இருந்து படிப்படியாக கற்றுக்கொண்டு இரண்டு குடிசைகளை உருவாக்கி இருக்கிறார் . இந்த குடிசைகளில் இவர் 8,000 காளான் பைகளை கொண்டு காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார். 2017ஆம் ஆண்டில் 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருக்கிறார். அதே ஆண்டில் இவருக்கு காளான் வளர்ப்பில் 24 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது/. பின்னர் தொடர்ச்சியாக காளான் வளர்ப்பை விரிவாக்கம் செய்த இவர் தற்போது பல்வேறு வகையான காளான்களையும் வளர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகிறார்.
தற்போது 3.5 ஏக்கர் நிலத்தில் இவர் கூரைகளை அமைத்து வேதாந்தா மஸ்ரூம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி ஆண்டுக்கு 1.5 லட்சம் கிலோ பட்டன் காளான் ,1 லட்சம் கிலோ ஓயிஸ்டர் காளானை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் இவர் சுமார் 2.25 கோடி வருமானமாக ஈட்டு இருக்கிறார் .இதில் இவருக்கு கிடைத்த லாபம் மட்டும் 1 கோடி ரூபாய்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications