ஹரியானா: இந்தியாவில் தற்போது பல்வேறு இளைஞர்களும் வேலைக்கு செல்வதை தாண்டி சுயமாக தொழில் செய்து முன்னேறி விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். அப்படி சுயதொழில் செய்ய விரும்பும் பலருக்கும் காளான் வளர்ப்பு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் காளான் வளர்ப்பில் ஆண்டுக்கு 2.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் இருக்கும் சலேம்கர் கிராமத்தை சேர்ந்த 26 வயதான இளைஞர் விகாஷ் வர்மா. இவருடைய குடும்பமே பாரம்பரியமாக விவசாய பணிகளில் தான் ஈடுபட்டு வந்திருக்கிறது. இவருடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் கோதுமை, பஞ்சு உள்ளிட்டவற்றை வேளாண்மை செய்து வந்தனர். இருந்தாலும் குடும்பத்திற்கு தேவையான செலவுகளுக்கு கூட விவசாயத்திலிருந்து அவர்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை.

இதனால் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்த விகாஷ் காளான் வளர்ப்பு பற்றி தெரிந்து கொண்டாராம் . மாநில வேளாண் துறை சார்பாக நடத்தப்பட்ட காளான் வளர்ப்பு வகுப்புகளில் கலந்து கொண்டாராம், இதனை எடுத்து பல்வேறு இடங்களுக்கும் சென்று காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து இதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன எப்படி எல்லாம் அவற்றை கடந்து வர வேண்டும் என கற்றுக் கொண்டார்.
காளான் வளர்ப்பிற்கு ஏசி தேவை ஆனால் அதற்கு ஏற்ற நிதி தன்னிடம் இல்லை எனவே குளிர்ச்சியான சூழலில் காளான் வளர்க்க மூங்கிலை கொண்டு வித்தியாசமான கூரை வீட்டை அமைத்தார். ஸ்மார்ட்டான முறையில் இரண்டு குடிசைகளை உருவாக்கி அதில் காளான் வளர்க்க தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் இவருக்கு காளான் வளர்ப்பில் எந்த லாபமும் கிடைக்கவில்லை மாறாக நஷ்டம் தான் அடைந்திருக்கிறார்.
தன்னுடைய தவறுகளில் இருந்து படிப்படியாக கற்றுக்கொண்டு இரண்டு குடிசைகளை உருவாக்கி இருக்கிறார் . இந்த குடிசைகளில் இவர் 8,000 காளான் பைகளை கொண்டு காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார். 2017ஆம் ஆண்டில் 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருக்கிறார். அதே ஆண்டில் இவருக்கு காளான் வளர்ப்பில் 24 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது/. பின்னர் தொடர்ச்சியாக காளான் வளர்ப்பை விரிவாக்கம் செய்த இவர் தற்போது பல்வேறு வகையான காளான்களையும் வளர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகிறார்.
தற்போது 3.5 ஏக்கர் நிலத்தில் இவர் கூரைகளை அமைத்து வேதாந்தா மஸ்ரூம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி ஆண்டுக்கு 1.5 லட்சம் கிலோ பட்டன் காளான் ,1 லட்சம் கிலோ ஓயிஸ்டர் காளானை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் இவர் சுமார் 2.25 கோடி வருமானமாக ஈட்டு இருக்கிறார் .இதில் இவருக்கு கிடைத்த லாபம் மட்டும் 1 கோடி ரூபாய்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications