இந்தியாவில் மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு சம்பள கமிஷனுக்கு பின்னரும் உயர்த்தி வழங்கப்படும். அதே போல ஓய்வூதிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியும் உயர்த்தி வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது 2025ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் படி ஓய்வூதியதாரர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

நிதி சட்டம் 2025 இன் ஓய்வூதியதாரர்களுக்கு இனி சம்பள கமிஷன் பலன்கள் கிடைக்காது என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது .இத்தகைய சூழலில் மத்திய அரசின் பிஐபி உண்மை கண்டறியும் குழு இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் முக்கியமான ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறது .
அதாவது சமூக வலைதளங்களில் ஒரு தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாட்ஸ் அப்பில் பரவக்கூடிய செய்தியில் மத்திய அரசு ஓய்வு கால பலன்கள் , அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்டவற்றை நிதி சட்டம் 2025 இன் படி நீக்கிவிட்டது என ஒரு தகவல் பரவி வருகிறது இது போலியான செய்தி என குறிப்பிட்டு இருக்கிறது .
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள கமிஷனின் பலன்கள் கிடைக்காதா ? என்ற தலைப்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் வாட்ஸ் அப்பில் வரக்கூடிய தகவல்களை நம்பாதீர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது . ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்களில் எந்தவித மாற்றத்தையும் அரசு கொண்டுவரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2021 ஆம் ஆண்டு மத்திய அரசு தன்னுடைய ஓய்வூதிய பலன்களுக்கான சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒரு பொதுத்துறை நிறுவன ஊழியர் தவறான செயல்களுக்காக வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தால் அவருக்கான ஓய்வு கால பலன்கள் ரத்து செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . இதனை தவறான முறையில் திரித்து தற்போது போலியான தகவலாக பகிர்கிறார்கள் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் வழக்கம் போலவே அகவிலைப்படி உயர்வு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு ஆகியவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications