தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான சகோதரிகள் மாதம் 1,000 ரூபாய் பெற்று பயனடைந்து வருகின்றனர். ஆனால் சிலருக்கு தகுதியிருந்தும் சில காரணங்களால் இன்னும் இந்த தொகையானது கிடைக்கவில்லை அல்லது சிலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.
அதற்காக நமக்கு ஏன் வரவில்லை? என்று அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கையில் இருக்கும் மொபைல் போன் மூலமாகவோ அல்லது மிக எளிதாக, ஆன்லைனில் மேல்முறையீடு செய்யவும் அரசு வழிவகை செய்துள்ளது. உங்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை கண்டறிந்து, அதை எப்படி சரிசெய்வது, மீண்டும் 1,000 ரூபாய் பெறுவது என்பது பற்றி இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேல்முறையீடு செய்ய என்ன தேவை?
மேல் முறையீட்டுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்கும் முன் கீழே உள்ள ஆவணங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
1. விண்ணப்ப எண்/குடும்ப அட்டை எண் (Ration Card)
2. ஆதார் அட்டை
3. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் (பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கே ஓடிபி வரும்)
4. நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்த குறுஞ்செய்தி அல்லது விவரம்
5. வருமானச் சான்று அல்லது சொத்து விவர ஆவணங்கள் (தேவைப்பட்டால்)
எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் விண்ணப்பம் நிராகரிப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டால், நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மேல் முறையீடு செய்யலாம். அப்படி தெரியாவிடில் இ-சேவை மையங்கள் மூலம் தேவையான விவரங்களை கொடுத்து மேல் முறையீடு செய்யலாம்.
நீங்கள் நேரடியாக kmut.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால், அதில் குறைத்தீர்வு என்பதை கிளிக் செய்யவும். அப்படி செய்தால் கீழாக விண்ணப்பதாரர் பற்றிய விவரங்கள் கேட்கப்படும்.
அதில் விண்ணப்பதாரர் பெயர் என்ன, குடும்ப தலைவரின் பெயர், மொபைல் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்டவற்றை கொடுத்து, Get OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஓடிபி கொடுத்து வெரிபிகேஷன் செய்த பிறகு, கீழாக குறைத்தீர்வு வகை என்ற ஆப்ஷனில் எந்த வகையான குறை என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து கீழாக குறிப்பு என்ற ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இருந்தால் அது குறித்து தெரிவிக்கலாம். அது தவறான காரணம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதோடு அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். அதை கொடுத்த பிறகு உங்களுக்காக ஒப்புதல் எண் (Acknowledgement Number) திரையில் வரும்.
நீங்கள் கொடுத்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, உங்கள் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் 30 நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள பட்சத்தில், உங்களுக்கான 1,000 ரூபாய் தொகை வங்கியில் வரத் தொடங்கும்..
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications