ஹெச்சிஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை முதலீட்டாளர்களை கவர்ந்துள்ள நிலையில் முன்னணி பத்திரிக்கைக்கு ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார் மற்றும், தலைமை நிதியியல் அதிகாரி பிரதீக் அகர்வால் முக்கியமான அப்டேட்-ஐ கொடுத்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு எங்களுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது என ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார் ஈடி-நவ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஒரு நிறுவன அளவில் 13.7% நிலையான நாணய வளர்ச்சியை வழங்கியுள்ளோம், மேலும் எங்கள் சேவை வணிகம் நிலையான நாணயத்தில் 15.8% வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ச்சி அனைத்தும் இயற்கையான வளர்ச்சியாகும். இரண்டாவதாக எங்கள் நிறுவனத்தின் வருவாய் அளவு 1,00,000 கோடி ரூபாய் அளவை தாண்டியுள்ளது. இது முக்கியமான சாதனை மட்டும் அல்லாமல் 2,25,000 ஹெச்சிஎல் ஊழியர்களுக்கும் இது ஒரு பெருமைக்குரிய விஷயமாகவும் மைல்கல் ஆகவும் உள்ளது என இந்த பேட்டியில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார் தெரிவித்தார்.
ஹெச்சிஎல் நிறுவனம் மிகவும் குறைந்த மார்ஜின் அளவில் ஆர்டர்களை பெற்று வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது ஹெச்சிஎல் தலைமை நிதியியல் அதிகாரி பிரதீக் அகர்வால் எங்கள் வணிகத்தில் போட்டியின் தீவிரம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இனி வரும் காலத்தில் போட்டியின் தன்மை அதிகரிக்குமே தவிர குறையாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தியாவில் ஐடி துறை மட்டுமே முழுமையாக வெளிநாட்டி வர்த்தகம் வர்த்தகம் செய்து வருகிறது. இதேபோல் இந்திய ஐடி துறையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைக்கே அதிகப்படியான வர்த்தகத்தையம், சேவைகளையும் அளித்து வருவதால் போட்டி கட்டாயம் கடுமையாக தான் இருக்கும்.
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை உலகளாவிய வாடிக்கையாளர்களிடம இருந்து வருகிறது. எனவே, எங்களுடைய வர்த்தகத்தில் போட்டித்தன்மை வாய்ந்தாக இருப்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.
இதேவேளையில் ப்ராஜெக்ட்-களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் எவ்விதமான மாற்றும் இல்லை, நிலையான விலையை கொண்டே வர்த்ககம் செய்து வருகிறோம். தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் பெரிய மார்ஜின் கிடைப்பது சந்தேகம் தான், ஆனாலும் வரும் காலத்தில் லாபம் அளவீடுகளில் எச்சரிக்கை உடன் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்பதையும் ஹெச்சிஎல் தலைமை நிதியியல் அதிகாரி பிரதீக் அகர்வால் ஒப்புக்கொண்டார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications