இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக புதிய ஐடி திட்டங்களை பெறுவதில் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், செப்டம்பர் மாத துவக்கத்தில் இருந்து அதிகப்படியான திட்டங்களை இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பெற்று வருகிறது.
புதிய ஐடி சேவை திட்டங்கள் பெற முடியாத காரணத்தால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாமல் மாட்டிக்கொண்டது. இதனால் ஃபிரஷ்ஷர்கள் உட்பட அனுபவம் பெற்ற ஊழியர்கள் வரையில் புதிய வாய்ப்புகள் இல்லாமல் தவித்தனர். இந்த நிலையில் செப்டம்பர் இந்திய ஐடி சேவை துறைக்கு சாதகமான காலக்கட்டமாக மாற துவங்கியுள்ளது.

இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக், ஆஸ்திரேலிய நாட்டின் 4வது பெரிய வங்கி அமைப்பாக இருக்கும் ANZ வர்த்தகம் செய்யும் 33 நாடுகளில் இருக்கும் டிஜிட்டல் ஊழியர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் தனது கூட்டணியை விரிவாக்கம் செய்துள்ளது.
ANZ நிறுவனத்திற்கு ஹெச்சிஎல் டெக் ஏற்கனவே பல்வேறு சேவைகளை அளித்து வந்த நிலையில், இப்புதிய ஒப்பந்த விரிவாக்கத்தின் மூலம் ரியாலிட்டி, GEN AI, IoT போன்ற தொழில்நுட்பத்தின் கீழ் அடுத்த தலைமுறை டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில் ஹெச்சிஎல் நிறுவனம் Siemens நிறுவனத்தின் ஐடி லேண்ட்ஸ்கேப்-ஐ மேம்படுத்தவும, கிளவுட் அடிப்படையிலான டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் சேவையை மேம்படுத்தும் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஹெச்சிஎல் ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் செப்டம்பர் மாதத்தில் இன்போசிஸ், நைஜீரிய நாட்டின் Guaranty Trust Bank திட்டத்தையும், ஐரோப்பாவின் STARK Group திட்டத்தையும் கைப்பற்றியது. டிசிஎஸ் நிறுவனம் ஐரோப்பாவின் Kingfisher plc, நார்வே நாட்டின் BankAxept AS டெக் மேம்பாட்டு திட்டங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications