உத்தரபிரதேசம்: இந்தியாவில் ஹெச்சிஎல் நிறுவனமும் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து Outsourced Semi-Conductor Assembly and Testing unit (OSAT) எனப்படும் செமிகண்டக்டர் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை ஆலையை அமைக்க இருக்கின்றன.
இந்த ஆலை உத்திரபிரதேச மாநிலத்தில் அமைய இருக்கிறது. ஹெச்சிஎல் நிறுவனமும் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் கூட்டு நிறுவனமாக இதனை நடத்த உள்ளன. இந்த ஆலையை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இந்த கூட்டு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் எல்&டி நிறுவனம் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக ஒரு ஆலையை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றி அதன் வடிவமைப்பு ,அதற்கான பொறியியல் மற்றும் கட்டுமான பணி , இறுதியில் ஆலை செயல்பாட்டுக்கு வருவது ஆகிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்களை தான் EPC என அழைக்கிறார்கள் . அதாவது Engineering, Procuremnet, Construction என்பது இதன் அர்த்தம். எல்&டி இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக இருக்கிறது.
அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் செமிகண்டக்டர் பிரிவுக்கான தலைவர் பாப்சிங் குஜராத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது ஹெச்சிஎல் நிறுவனமும் இணைந்து எல்&டி நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது ஒரு ஆரம்ப கட்ட ஆலோசனை தான் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெச்சிஎல், ஃபாக்ஸ் கான் இணைந்து உருவாக்கக்கூடிய இந்த கூட்டு நிறுவனத்திற்கு இந்த மாத இறுதிக்குள்ளேயே மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் எந்த நிறுவனத்திடம் கட்டுமான பணிகளை ஒப்படைப்பது என்ற முடிவு அறிவிக்கப்படும் என ஹெச்சிஎல் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆலையானது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதில் 40 சதவீத ஈக்விட்டி பங்குகள் ஃபாக்ஸ் கான் வசமும் மீதமுள்ள பங்குகள் ஹெச்சிஎல் வசமும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த ஆலைக்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் 37.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. அதேவேளையில் எல்&டி நிறுவனத்திற்கு போட்டியாக தைவானை சேர்ந்த சிடிசிஐ நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏனெனில் ஃபாக்ஸ் கான் நிறுவனத்தின் சென்னை வளாகத்தை கட்டமைத்துக் கொடுத்தது சிடிசிஐ நிறுவனம் தான்.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை பெறுவதில் எல்&டிக்கும் சிடிசிஐ நிறுவனத்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என சொல்லப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் யமுனா எக்ஸ்பிரஸ்வே பகுதிக்கு அருகிலேயே இந்த ஆலையை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications