மதுரை இளைஞர்களுக்கு குட்நியூஸ் சொன்ன HCL..!! தூங்கா நகரத்தில் இனி ஐடி வேலைக்கு பஞ்சமிருக்காது..!!

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஐடி வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னைக்கும், பெங்களூருவுக்கும் தான் பயணிக்க வேண்டும். குடும்பத்தினரை விடுத்து இந்த பெரு நகரங்களுக்கு ஐடி வேலைகளுக்காக ஆயிரக்கணக்கானவர்கள் படையெடுக்கின்றனர்.

பெரிய , பெரிய நகரங்களில் ஐடி வேலை கிடைத்தாலும் அங்கே ரூம் வாடகை தொடங்கி அனைத்துமே காஸ்ட்லியாக இருக்கிறது என்பதால் சம்பாதிக்கும் பணம் அதற்கு செலவிடவே சரியாக இருக்கிறது. இதனை தாண்டி வார இறுதி நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டி இருக்கிறது.

மதுரை இளைஞர்களுக்கு குட்நியூஸ் சொன்ன HCL..!! தூங்கா நகரத்தில் இனி ஐடி வேலைக்கு பஞ்சமிருக்காது..!!

வேலைவாய்ப்புக்காக நிறைய பேர் சென்னை போன்ற நகரங்களுக்கு வருவதால் இங்கே மக்கள் தொகை அதிகரிக்கிறது. ஆனால் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல், மழை காலங்களில் வெள்ளம் என பல சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது.

எனவே தான் அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை என்பதில் அரசு தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி வேலைகளை கொண்டு வந்தால் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் அங்கேயே வேலைவாய்ப்பு பெறுவார்கள். இது அந்த மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

தமிழ்நாட்டின் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரையில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஐடி படிப்பை முடித்து வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகின்றனர். இவர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் ஐடி வேலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே மதுரையில் எல்காட் ஐடி பூங்கா நிறுவப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதுரையில் தன்னுடைய ஐடி அலுவலகத்தை நிறுவி பலருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல். இந்த நிறுவனம் மதுரையில் மேலும் தங்களுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இலந்தைகுளம் எல்காட் ஐடி பூங்காவில் தான் தற்போது hcl அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

இதற்காக ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு 2.41 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கே 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அலுவலகத்தை நிறுவ ஹெச்சிஎல் முடிவு செய்து இருக்கிறது. இந்த அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் கூடுதலாக 1500 ஐடி ஊழியர்களுக்கு இங்கே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஹெச்சிஎல் நிறுவனம் இங்கே விரிவாக்கம் செய்கிறது என்றால் அதற்கேற்ற மனித வளம் இங்கே கிடைக்கிறது என்று தான் அர்த்தம். இதன் மூலம் மேலும் பல நிறுவனங்களும் தங்களின் ஐடி அலுவலகங்களை மதுரையில் நிறுவவும் விரிவாக்கம் செய்யவும் முன்வரும். இது மதுரை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பையும், மதுரை நகருக்கு பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+