இந்தியாவில் எட்டெக் அதாவது ஆன்லைன் கல்வி சேவை நிறுவனம் மிகவும் மோசமாக உள்ளது, குறிப்பாக இத்துறையில் பெரிய நிறுவனமாக இருக்கும் பைஜூஸ் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான HCL குழுமம் ரோஷினி நாடார் தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதோடு, பல புதிய துறையில் இறங்க முடிவு செய்து அதற்கான பணிகளில் மிகவும் தீவிரமாக உள்ளது.

இதற்குச் சிறப்பான உதாரணம், ஐடி சேவையில் மட்டுமே இருந்த ஹெச்சிஎல் பாக்ஸ்கான் உடன் இணைந்து செமிகண்டக்டர் துறையில் இறங்கக் கூட்டணி நிறுவனத்திற்கான ஒப்பந்தம் செய்தது தான். இதன் நீட்சியாக தற்போது எட்டெக் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது ஹெச்சிஎல்.
கல்வி மென்பொருள் நிறுவனமான எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் (Ei) நிறுவனத்தில் ஹெச்சிஎல் குரூப் சுமார் ரூ.166 கோடி முதலீடு செய்துள்ளது. இது, இரண்டாம் நிலை பங்கு விற்பனை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும், அதாவது நேரடியாக எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் (Ei) நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்காமல், மும்பையைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கஜா கேப்பிட்டல் நிறுவனம் வைத்திருந்த பங்குகளின் ஒரு பகுதியை HCL குழு கையகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து HCL குழுமத்தின் இயக்குனர் ஷிகார் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம், இந்த நிறுவனம் விரிவாக்கம் செய்யக்கூடிய வகையில் இருக்கும் தொழில்நுட்பம், சமூக நலத் திட்ட முயற்சிகள் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனம், தென்னாப்பிரிக்கா, கென்யா, கானா மற்றும் சவுதி அரேபியா போன்ற புதிய சந்தைகளுக்கு விரிவடையத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இயங்கி வருகிறது.
இதேபோல் எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனம் அதன் சேவைகளை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில், கல்வி மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் எட்டெக் ப்ராடெக்ட் நிறுவனங்களைக் கையகப்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனத்தின் சேவைகளுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான கட்டணம் செலுத்தும் பயனர்கள் இருப்பதாகக் கூறுகிறது. 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனம், வணிகம்-டு-வணிகம் (B2B) மாதிரியில் இயங்குகிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications