டெல்லி: நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியம் அற்ற நிறுவனங்கள் தொழில்சாலைகள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
எனினும் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியும் படி அறிவுறுத்தி வருகிறது. இதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் பல நிறுவனங்கள் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஏன் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் கூட செய்து வருகின்றன. சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தையும் குறைத்து வருகின்றன.
தாக்கம் இல்லை
ஆனால் உலகளவில் கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், நடப்பு காலாண்டில் பெரிதும் தாக்கம் இல்லை என அறிவித்துள்ளது ஹெச்சிஎல். ஏனெனில் ஹெச்சிஎல்லின் இந்திய ஊழியர்களில் 76% பேர் வீட்டில் இருந்து பணி புரிந்து வருவதாகவும், இதே இந்தியாவுக்கு வெளியே 92% வீட்டில் இருந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எந்தவித இடையூறும் இல்லை
ஆக இதன் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டில் இருந்தும் கூட பணியாற்றி வருவதால், எந்த வித இடையூறும் இல்லை என அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலாண்டு எண்களில் இதன் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் எங்கள் வணிகத்தில் கொரோனாவினால் பெரிய தாக்கம் எதையும் இது வரை நாங்கள் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி
இந்த காலாண்டில் அறிக்கை இதுவரை கணக்கிடப்படாவிட்டாலும், எங்கள் வணிக மாதிரியானது, கடினமான காலங்களில் பின்னடைவுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளதால், நீண்ட காலத்திற்கு வலுவாக வெளிவர எங்களின் வணிக மாதிரி உதவும் என்றும் ஹெச்சிஎல் கூறியுள்ளது. சமீபத்தில் ஹெச் சிஎல் ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர்.
நெருக்கடியை சமாளிப்போம்
மேலும் ஹெச்சிஎல் நிறுவனம் தொடர்ந்து ஜனவரி பிற்பகுதியில் இருந்து கொரோனாவின் தாக்கத்தினை பற்றி கண்காணித்து வருவதாகவும், இதனால் இத்தகைய நெருக்கடி காலத்தினை சமாளிக்கும் விதமாக தயாராகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பது எங்கள் கடமைகளில் முக்கியமான ஒன்று. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் தீவிரமான ஆலோசனையுடன் ஈடுபட்டு வருகிறோம்.
எந்தவித பிரச்சனையுல் இல்லை
மேலும் நாங்கள் தொடர்ச்சியான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறோம். அதோடு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதில் எந்தவித இடையூறையும் காணவில்லை. ஆக எங்களுக்கு மிக உறுதுணையாக இருக்கும் எங்கள் வாடிக்கையாளார்கள் மற்றும் நிறுவனங்கள், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications