இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனம், ரோஷினி நாடார் தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் தனது தந்தையின் கனவு திட்டத்தையும், ஷிவ் நாடார் ஹெச்சிஎல் நிறுவனத்தை உருவாக்கியதற்கான அடிப்படை நோக்கத்தையும் பூர்த்தி செய்ய புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
ஷிவ் நாடார் ஹெச்சிஎல் நிர்வாகத்தை ரோஷினி நாடார் கையில் கொடுக்கும் போது ஹெச்சிஎல் சாம்ராஜ்ஜியத்தின் நிலை என்னாகும் என பல கேள்விகள் இருந்தாலும், அனைத்து கேள்விகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளது அவருடைய டீம். இந்த நிலையில் ரோஷினி நாடார் தலைமையில் ஹெச்சிஎல் டெக் மென்பொருள் சேவை துறையில் மட்டும் இல்லாமல் வன்பொருள் துறையிலும் இறக்க முடிவு செய்துள்ளார்.

ஹெச்சிஎல் குரூப் கர்நாடகா மாநிலத்தில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் OSAT தொழிற்சாலையை கட்டமைக்க முடிவு செய்துள்ளது, இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பாக கர்நாடகா அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஹெச்சிஎல் நிர்வாகம்.
கர்நாடகா மாநிலத்தில் ஹெச்சிஎல் குரூப் அமைக்கும் இந்த சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் தளம் (OSAT) சிறிய அல்லது நடுத்தர அளவில் தான் இருக்க போகிறது, இதற்காக சுமார் 400 மில்லியன் டாலர் அளவுக்கு ரோஷினி நாடார் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஹெச்சிஎல் குரூப் அமைக்கும் இந்த சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் தளத்திற்கு கர்நாடகா அரசு பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகிலும், மைசூரிலும் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஆனால் இதை இன்னும் ஹெச்சிஎல் டெக் உறுதி செய்யவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.
மைசூர் தான் சிலிக்கான் ஃபேப் உற்பத்திக்கும், OSAT தயாரிப்பிற்கும் ஏற்ற இடமாக கர்நாடக மாநிலம் கருதுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இப்பகுதியில் தான் போதுமான தண்ணீர் வசதிகள் கிடைக்கிறது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் HCL குழுமத்திற்கான பல்வேறு ஊக்க திட்டத்தையும் கர்நாடக மாநில அரசு உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications