தீபாவளிக்கு முன் ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 15% சம்பள உயர்வு அறிவித்த HCL டெக்..!!

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் டெக் தனது ஊழியர்களுக்கு அக்டோபர் 2024 முதல் அதாவது இந்த மாதம் முதல் 7% சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதில், சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு 12-15 சதவீத உயர்வு இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனம் அதன் 2025ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,235 கோடியும், செயல்பாட்டு வருவாய் ரூ.28,862 கோடியும் முறையே 11% மற்றும் 8.2% அதிகரித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன் ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..  15% சம்பள உயர்வு அறிவித்த  HCL டெக்..!!


நிறுவனத்தின் முதன்மை மனிதவள அதிகாரி ராமச்சந்திரன் சுந்தரராஜன் கருத்துப்படி, எச்சிஎல் டெக் தனது ஊழியர்களுக்கு அக்டோபர் 2024 முதல் 7% சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு 12-15% வரை உயர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பள உயர்வு நிறுவனத்தின் செயல்பாட்டு வரம்புகளில் குறைந்தபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், எச்சிஎல் டெக் செயல்திறன் நடவடிக்கைகள் மூலம் அதன் தாக்கத்தை சமநிலைபடுத்த தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், சம்பள உயர்வுக்கு தகுதியான ஊழியர்களின் எத்தனை பேர் என்பது நிறுவனத்தின் மறுஆய்வு சுழற்சியைப் பொறுத்தது என்றும் கூறியுள்ளார்.

எச்சிஎல் டெக் இன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 2,18,621 ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 780 ஊழியர்கள் குறைவாகும். மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருவதாகவும்,இன்னும் சில ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல முக்கிய இந்திய ஐடி நிறுவனங்கள் செலவுகளை நிர்வகிப்பதற்கு இந்த ஆண்டு மூன்றாம் காலாண்டிற்கு சம்பள உயர்வை மாற்றியுள்ளன.நிறுவனத்தின் வருடாந்திர இழப்பீட்டு மதிப்பாய்வு செயல்முறையை இந்த நடவடிக்கை பின்பற்றுகிறது.

மந்தமான தேவைச் சூழலுக்கு மத்தியில் செலவுகளை நிர்வகிப்பதற்கும் லாபத்தைத் தக்கவைப்பதற்கும் பல முன்னணி இந்திய ஐடி நிறுவனங்கள் சம்பள உயர்வை 2025ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டிற்கு மாற்றியிருக்கும் நேரத்தில் எச்சிஎல் டெக் இதனை அறிவித்துள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து, எச்சிஎல் டெக் செயல்திறன் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி அதன் பணியாளர்களை அதிகப்படுத்த இலக்கு வைத்துள்ளது. நிறுவனத்தின் Q2 செயல்திறன் சந்தை எதிர்பார்ப்புகளை முறியடித்த நிலையில், EBIT மார்ஜின் 18.6% ஐ எட்டியது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 149 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ், செப்டம்பர் காலாண்டில் ரூ.4,235 கோடி ஒருங்கிணைந்த லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது 10.5% அதிகமாகும், அதேசமயம் கடந்த ஆண்டு இதே காலாண்டில், நிறுவனம் நிகர லாபத்தை பதிவு செய்தது. இது தற்போது ரூ.3,832 கோடி ஆகும்.

அதேபோல், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.28,862 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் பதிவு செய்த ரூ.26,672 கோடியை விட 8.2% அதிகம் ஆகும். வருவாய் மற்றும் வருவாய்க்கு பிந்தைய லாபம் இரண்டும் ET Now கருத்துக்கணிப்பு மதிப்பீடுகளான ரூ.4,120 கோடி மற்றும் ரூ.28,550 கோடியை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+