இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் இன்று தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், அதன் நிகர லாபம் 10.5% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் ரூ.3,832 கோடி பதிவு செய்திருந்த நிலையில், இம்முறை ரூ.4,235 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் 8.2% அதிகரித்து ரூ.28,862 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.26,672 கோடி மட்டுமே வருவாயாகப் பதிவு செய்யப்பட்டது . வருவாய் மற்றும் லாபம் இரண்டும் சந்தை எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கும் காரணத்தால் நாளை ஹெச்சிஎல் பங்குகள் அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிர்வாகம் செப்டம்பர் காலாண்டு முடிவில் பங்குதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரூ.12 இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. இந்த இடைக்கால ஈவுத்தொகையைச் செலுத்தும் தேதி அக்டோபர் 30 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சி கணிப்பையும் வெளியிட்டு உள்ளது, இதில் நிலையான நாணய விதிமுறைகளில் வருடாந்திர அடிப்படையில் 3.5% முதல் 5.0% வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கிறது.
மேலும் செப்டம்பர் காலாண்டு முடிவில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,18,621 ஆக உள்ளது. இக்காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 780 பேர் குறைந்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் 2,932 புதிதாக சேர்த்ததுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதிகரித்துள்ளது.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் செப்டம்பர் காலாண்டில் 14.2% இல் இருந்து 12.9% ஆக குறைந்துள்ளது. இது மிகவும் முக்கியமான மாற்றமாகவும், முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் இக்காலாண்டில் புதிதாகப் பெற்ற மொத்த ஒப்பந்தங்களின் மதிப்பு 2.218 பில்லியன் டாலராகும்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications