இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஹெச்சிஎல், ரோஷினி நாடார் கைக்கு வந்த பின்பு வேகமாகவும், வலிமையுடனும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு அதன் ஊழியர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் ரோஷினி நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 4350 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 6.2 சதவீதமும், செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 13.5 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.

இதேபோல் டிசம்பர் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் வருவாய் 28,446 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 6.65 சதவீதமும், செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 6.5 சதவீத அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது.
ஹெச்சிஎல் டெக் வரும் காலத்தில் அதிகப்படியான முதலீட்டைச் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவையில் செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்த மோசமான காலகட்டத்திலும் ஹெச்சிஎல் நிறுவனம் தொடர் வளர்ச்சி பாதையில் உள்ளதாக இந்நிறுவனத்தின் சிஇஓ, நிர்வாக இயக்குனர் சி.விஜயகுமார் தெரிவித்தார்.
டிசம்பர் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் சுமார் 18 முக்கியத் திட்டங்களைப் பெற்றுள்ளதாகவும், இதில் 6 திட்டங்கள் சாப்ட்வேர் பிரிவிலும், 12 சேவைகள் சேவை பிரிவிலும் பெறப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் திட்டங்கள் ரீடைல், லைப் சையின்ஸ், ஹெல்த்கேர், பப்ளிக் சேவைகள், நிதி சேவை பிரிவில் பெற்றுள்ளது.
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 14.2 சதவீதத்தில் இருந்து 12.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 21.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தை மதிப்பீட்டின் படி இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த காலாண்டைப் போலவே இந்தக் காலாண்டும் ஊழியர்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் 3630 பிரஷ்ஷர் ஊழியர்களைக் கூடுதலாகச் சேர்த்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 3818 பிரஷ்ஷர் ஊழியர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,617 பேர் அதிகரித்து 2,24,756 ஆக உயர்ந்துள்ளது.
கடைசியாக முதலீட்டாளர்களுக்கு 2 ரூபாய் முகமதிப்புடைய பங்குகளுக்கு 12 ரூபாய் ஈவுத்தொகை அளிப்பதாக அறிவித்துள்ளது ஹெச்சிஎல் டெக் நிர்வாகம். 2024 ஆம் ஆண்டில் நிலையான நாணய மதிப்பீட்டில் ஹெச்சிஎல் டெக் வருவாய் 5.0 முதல் 5.5 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளது. இன்போசிஸ் 2.5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications