ஹெச்சிஎல் நிறுவனம் தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் ஐடி நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஐடி சேவை துறையில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற பெரும் குழுப்பத்தில் உள்ளனர். இதேவேளையில் ஹெச்சிஎல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் இந்நிறுவன ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்யலாமா என யோசிக்க துவங்கியுள்ளனர்.
ஹெச்சிஎல் நிறுவனம் தனது ஜூன் காலாண்டில் 7.6 சதவீத உயர்வுடன் சுமார் 3,534 கோடி ரூபாய் லாபத்தையும், வருவாயில் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் உயர்வுடன் 26,296 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஹெச்சிஎல் நிறுவனம் தனது ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவை மேம்படுத்த ஊழியர்களின் சம்பளத்தில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஜூன் காலாண்டு முடிவில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,23,438 ஆக உள்ளது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,506 பேர் குறைந்துள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஐடி நிறுவனமும் காலாண்டு அடிப்படையில் அதிக ஊழியர்களை சேர்க்கும், இந்த நிலையில் ஜூன் காலாண்டில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணம் உள்ளது.
கொரோனா தொற்று பின்பு இந்திய ஐடி சேவை துறையில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்பை பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் ஊழியர்களுக்கு 70 முதல் 120 சதவீதம் வரையில் சம்பளம் அளிக்ககொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதிகப்படியான வர்த்தக பாதிப்பு காரணமாக புதிதாக பெறக்கூடிய வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஊழியர்களின் அதிகப்படியான சம்பள செலவுகள் மூலம் நிறுவனத்தின் மார்ஜின் குறைந்து வருகிறது.

இதை சரி செய்ய ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தனது ஜூனியர் மற்றும் நடுத்தர பிரிவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளிக்காமல் இருக்க முடியாது என்பதற்காகவும், வர்த்தக வளர்ச்சிக்கும் பிஸ்னஸ் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக சம்பள உயர்வை இந்த வருடம் வழங்குகிறது. ஆனால் ஒரு காலாண்டுக்கு ஒத்திவைத்து தாமதமாத வழங்குகிறது.
இதேபோல் நிர்வாக பிரிவுக்கு மேல் அதாவது இருக்கும் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு மேல் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கவில்லை, இதன் மூலம் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வு மொத்தமாக கட் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போதைய சந்தை நிலவரத்தில் உயர் அதிகாரிக்களுக்கான வேலைவாய்ப்பு வெளி சந்தையில் மிகவும் குறைவு என்பதை தெரிந்துக்கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள் சம்பள உயர்வை குறைத்தும், ஒத்திவைத்தும் வரும் காரணத்தால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி உடன் சோகத்திலும் மூழ்கியுள்ளனர். குறிப்பாக உயர்மட்ட அதிகாரிகள் வேலைவாய்ப்புகளை தேடும் படலத்தில் உள்ளனர், ஆனால் டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனத்திலேயே ஆன்போர்டிங் செய்ய 3-4 மாதம் தாமதமாகும் காரணத்தால் பணியை ராஜினாமா செய்ய முடியவில்லை.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications