எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இன்று டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், தனது பங்குதாரர்களுக்கு நான்காவது இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 6% அதிகரித்து ரூ.4,591 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 5% அதிகரித்து ரூ.29,890 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஹெச்சிஎல் நிறுவனம் இக்காலாண்டில் முடிவில் தனது பங்குதாரர்களுக்கு ரூ.12 இடைக்கால ஈவுத்தொகையும் மற்றும் ரூ.6 சிறப்பு ஈவுத்தொகை என மொத்தம் ஒரு பங்கிற்கு ரூ.18 ஈவுத்தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு சுமார் 25 ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டாடுவதற்காக இந்த சிறப்பு ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஈவுத்தொகை அறிவிப்பு, தனது பங்குதாரர்களுக்கு வெகுமதி அளிப்பதிலும், அவர்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி செலுத்தும் விதமாக எச்.சி.எல் டெக்னாலஜிஸின் இந்த ஈவுத்தொகை அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
எச்.சி.எல் டெக்னாலஜிஸ்-ன் CEO மற்றும் நிர்வாக இயக்குனர் சி.விஜயகுமார் இந்நிறுவனத்தின் வருவாய், லாபம் குறித்து கூறுகையில் இந்த வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் ஏஐ-இயங்கும் தீர்வுகளுக்கான வலுவான தேவை காரணம் என்று கூறினார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் நிறுவனத்தின் செயல்திறன் குறித்து நம்பிக்கை அளிக்க கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ரோஷ்னி நாடார் மேலும் பேசுகையில் ஏஐ அடிப்படையிலான சேவைகளில் ஏராளமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications