ஹைதராபாத்: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் தங்களுடைய நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ஐந்தாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்கோத்ரா தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டி பகுதியில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு ரோஷினி நாடார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த புதிய அலுவலகத்தின் மூலம் ஹைதராபாத்தில் கூடுதலாக 5,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பாக பொறியியல் துறை சார்ந்து இந்த வேலை வாய்ப்புகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் தெலுங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
மாநில அரசோடு இணைந்து இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவது குறித்து ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் எடுத்துரைத்தது. அப்போது ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு உட்பட்ட கல்வி தளமான GUVI மூலம் தெலுங்கானாவின் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்தோடு இணைந்து பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்துவது என்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இதனை விரிவாக்கம் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் ஹெச்சிஎல் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருவது மட்டுமின்றி தங்களுடைய நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருப்பதற்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நன்றி தெரிவித்தார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் ஹெச்சிஎல் நிறுவனம் மிகப்பெரிய பங்காற்றி இருப்பதாகவும் அவர் பெருமை தெரிவித்தார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் தெலுங்கானா அரசு இடையே மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் மேம்பாட்டு பயிற்சிகளை அழிப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஏற்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ரோஷினி நாடார் கூறியுள்ளார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 1976 ஆம் ஆண்டு ஷிவ் நாடார் அவர்களால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் தலைமையிடம் நொய்டாவில் அமைந்துள்ளது, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவராக ரோஷினி நாடார் மல்கோத்ரா பணியாற்றி வருகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications