ஐடி நிறுவனங்களின் மாஸ் அறிவிப்பு.. ஹெச்சிஎல் முதல் இன்ஃபோசிஸ் வரை.. பெண்களுக்கு குட் நியூஸ்..!

ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் கொரோனா காலத்தில் கூட மாஸ் ஆன அறிவிப்புகளை கொடுத்து வருகின்றன.

தொடர்ந்து பணியமர்த்தல், சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. வழக்கத்திற்கு மாறான வளர்ச்சிக்கு மத்தியில், பல புதிய ஒப்பந்தங்களை போட்டு வருகின்றன.

இதற்கிடையில் பல்வேறு துறைகளிலும் ஐடி துறையினரின் தேவையானது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பற்பல துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகின்றது.

பணியமர்த்த திட்டம்

பணியமர்த்த திட்டம்

ஐடி நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்த, அதிகளவில் பெண்களை பணியமர்த்த ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சுமார் 60,000 பெண்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளன.

இன்ஃபோசிஸின் இலக்கு

இன்ஃபோசிஸின் இலக்கு

தி எக்னாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி, இந்திய ஐடி நிறுவனங்களில், இந்த ஆண்டு பிரெஷ்ஷர்களை அதிகளவில் பணியமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2030ம் ஆண்டில் மொத்த ஊழியர்களில் 45% பெண் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

 

Array

Array

இதே டிசிஎஸ் நிறுவனம் புதியதாக பணியமர்த்தும் 40,000 பேரில், 15,000 - 18,000 பெண் பட்டதாரிகளை நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது 1,85,000 பெண்கள் பணியில் உள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் அதிக பெண்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கிடையே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது என அதன் தலைமை அதிகாரி ரிது ஆனந்த் கூறினார்.

ஹெச்சிஎல் டெக்னாலஜி

ஹெச்சிஎல் டெக்னாலஜி

ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனம் 50 - 50க்கு அளவில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அதோடு இந்த ஆண்டு கேம்பஸ் இண்டர்வியூ மூலம், ஹெச்சிஎல்-ல் பணியமர்த்தப்பட்ட புதிய ஊழியர்களில் 60% பெண்கள் என்றும் அறிவித்துள்ளது.

விப்ரோ என்ன சொல்கிறது?

விப்ரோ என்ன சொல்கிறது?

விப்ரோ நிறுவனம் 30,000 பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களில் 50% பெண்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கேம்பஸில் வேலைக்கு அமர்த்தும் பாலின வேறுபாடு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று விப்ரோவின் தலைமை மனிதவள அதிகாரி சௌரப் கோவில் கூறியுள்ளார்.

லிங்க்ட் இன் நிலவரம்

லிங்க்ட் இன் நிலவரம்

சமீபத்தில் லிங்க்ட் இன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பணியமர்த்தல் என்பது, கொரோனா முந்தைய நிலைகளை விட 42% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் ஏப்ரல் மே மாதங்களில் மோசமான அளவில் வேலையின்மை விகிதம் அதிகரித்தது. இது கொரோனாவின் இரண்டாம் அலைக்கு மத்தியில் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது.

 

பாலின வேறுபாடு எவ்வளவு

பாலின வேறுபாடு எவ்வளவு

இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் தற்போது 33% பாலின வேறுபாடு விகிதத்தை கொண்டுள்ளது, கொரோனாவின் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்ப்பது மற்றும் பிளெக்ஸி வேலை மாதிரிகள் ஐடி துறையில் அதிகரித்துள்ளன. இது மேலும் பெண்களை பணியமர்த்த சாதகமான விஷயமாக பார்க்கப்படுவதாக நாஸ்காம் கூறியுள்ளது..

பெண்களை ஊக்கப்படுத்தும்

பெண்களை ஊக்கப்படுத்தும்

மொத்தத்தில் ஐடி துறையில் நடப்பு ஆண்டில் ஊழியர்களுக்கு தொடர்ந்து சாதகமான அறிவிப்புகளையே கொடுத்து வருகின்றன. அதோடு பெண்களின் பங்கு அதிகரிப்பது என்பது இன்னும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் தற்போது அதிகரித்து வரும் பிளெக்ஸி கலாச்சாரம் மேம்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலத்தில் இது இன்னும் பெண் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+