சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் பிரிவான HDB பைனான்சியல் சர்வீசஸ், ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு சுமார் ரூ.2,500 கோடி திரட்டும் திட்டத்திற்கு இதன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று ஹெச்டிஎப்சி வங்கி வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஐபிஓ-வின் கீழ், புதிய பங்கு விற்பனை மூலம் ரூ.2,500 கோடி நிதியை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இந்த ஐபிஓ-வில் நிறுவனத்தின் ஆர்வமுள்ள தற்போதைய மற்றும் தகுதியான பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பையும் ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் அளிக்க முடிவு செய்துள்ளது.

HDB Financial Services என்பது ஹெச்டிஎப்சி வங்கியின் முக்கியமான ஒருங்கிணைக்கப்படாத நிதியியல் நிறுவனமாகும் அதாவது NBFC பிரிவாகும் ஆகும், இப்பிரிவு ஹெச்டிஎப்சி வங்கி செல்ல முடியாத அடைய முடியாத சில்லறை மற்றும் வணிக பிரிவுகளுக்குச் சேவை அளித்து வருகிறது. இதற்காகப் பல முக்கியமான நிதியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
HDB Financial Services பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன், சொத்துக்கள் மீதான கடன், நுகர்வோர் கடன்கள் மற்றும் சொத்துக்கு எதிரான கடன்களில் நிபுணத்துவம் பெற்றது விளங்குகிறது. HDB-FS இந்தியா முழுவதும் தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்குக் கடன் உதவிகளை வழங்கி வருகிறது.
HDB Financial Services 2023ஆம் நிதியாண்டில் தனது கடன் புத்தகத்தில் சுமார் 17% என்ற வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இந்த NBFC நிறுவனம் சுமார் ரூ.66,000 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,740 கோடியாக இருந்தது.
More From GoodReturns

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏப்ரல் 1 முதல் ஏடிஎம் விதிமுறைகள் மாற்றம்?

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications