இந்தியாவின் மிக முக்கியமான தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச் டி எஃப் சி வங்கியின் காலாண்டு முடிவுகள் இன்று (ஜனவரி 18, 2020) வெளியாகி இருக்கின்றன. மசால் வடை மசால் வடை தான் என்கிற ரீதியில் ஹெச் டி எஃப் சி வங்கி ஒரு தனியார் நிறுவனம் தான் என்பதை மீண்டும் தன் டிசம்பர் 2019 காலாண்டில் காட்டி இருக்கிறது.
ஹெச் டி எஃப் சி வங்கி, இந்த டிசம்பர் 2019 காலாண்டில் 7,416 கோடி ரூபாயை நிகர லாபமாகக் காட்டி இருக்கிறது. கடந்த டிசம்பர் 2018-ல் ஹெச் டி எஃப் சி வங்கியின் நிகர லாபம் வெறும் 5,585 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக கடந்த டிசம்பர் 2018-ஐ விட டிசம்பர் 2019-ல் நிகர லாபம் 32.77 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அதே ஹெச் டி எஃப் சி வங்கி, இந்த டிசம்பர் 2019 காலாண்டில் 7,015 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டலாம் என ப்ளூம்பெர்க் நிறுவனம் கணித்து இருந்தது. அந்த கணிப்பை விட அதிக நிகர லாபத்தை ஹெச் டி எஃப் சி வங்கி சம்பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து நிகர வட்டி வருமானத்துக்கு வருவோம். அது என்ன நிகர வட்டி வருமானம். கடன் மூலம் வங்கிகளுக்கு வந்த மொத்த வட்டி - டெபாசிட்களுக்கு வங்கி கொடுத்த மொத்த வட்டி = நிகர வட்டி வருமானம்.
இந்த நிகர வட்டி வருமானமும், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் 12.69 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். டிசம்பர் 2019 காலாண்டின் நிகர வட்டி வருமானம் 4,172 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய டிசம்பர் 2018 காலாண்டில் நிகர வட்டி வருமானம் 12,576 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச் டி எஃப் சி வங்கியின் நிகர வாராக் கடன் 0.48 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 0.42 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.