சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் எச்.டி.எஃப்.சி வங்கி முக்கியமான தொழில்நுட்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதால், வரும் ஆகஸ்ட் 10, 2024 அன்று மூன்று மணி நேரம் யூபிஐ சேவைகளை அதன் வாடிக்கையாளர்கள் யாரும் பயன்படுத்த முடியாது என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த திட்டமிடப்பட்ட யூபிஐ சேவை இடைநிறுத்தம் குறித்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனைவருக்கும் தெரிவித்து வருகிறது.
யூபிஐ சேவை எப்போது செயல் இழக்கும்?: எச்.டி.எஃப்.சி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள ஈமெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, ஆகஸ்ட் 10, 2024 அன்று காலை 02:30 மணி முதல் காலை 05:30 மணி வரை (3 மணி நேரம்) யூபிஐ சேவைகளைப் பயன்படுத்த முடியாது.

இந்த காலகட்டத்தில் எச்.டி.எஃப்.சி வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு (CASA) வைத்திருப்பவர்களுக்கான நிதி மற்றும் நிதி சாராத பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.
இதோடு எச்.டி.எஃப்.சி வங்கி மொபைல் பேங்கிங் ஆப், கூகுள் பே, வாட்ஸாப் பே, பேடிஎம், ஸ்ரீராம் நிதி மற்றும் மொபிக்விக் உடன் இணைக்கப்பட்ட எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் நிதி மற்றும் நிதி சாராத பரிவர்த்தனைகள் செய்ய முடியாது.
எச்.டி.எஃப்.சி வங்கியில் யூபிஐ வரம்பு என்ன?: P2P (நபர் முதல் நபர்) வரம்பு ரூ. 1 லட்சம் அல்லது 24 மணி நேர அடிப்படையில் 20 பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும்.
இன்று ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் வரி செலுத்தும் இடத்தில் யூபிஐ பேமெண்ட் வாயிலாகச் செலுத்தப்படும் பணத்திற்கான லிமிட்-ஐ ஒரு நாளுக்கு தற்போது இருக்கும் 1 லட்சம் ரூபாயை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில் வரி செலுத்தும் போது யுபிஐ வாயிலாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் இதை ஆர்பிஐ வங்கியின் இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டத்தில் 5 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
முன்பு வரி தொடர்பான பேமெண்ட்களுக்கு 1 லட்சம் வரையில் மட்டுமே வரி சலுகை அளிக்கப்பட்டது, இதற்கு அதிகமான தொகைக்கு வரி விதிப்பு இருந்தது. இதை தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது மூலம் 5 லட்சம் வரையிலான வரி பேமெண்ட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications