எச்டிஎஃப்சி வங்கியின் பெயரை ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றி போலியான லிங்க் அனுப்பி மோசடி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளதாக HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் தொடங்கியது முதலே மோசடிகளும் ஆரம்பித்து விட்டன என்பதும், மோசடிகள் மூலம் அப்பாவி வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது குறி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட மோசடியால் HDFC வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
HDFC வங்கி
HDFC வாடிக்கையாளர்களை குறிவைத்து ஒரு எஸ்எம்எஸ் அல்லது மெயில் அனுப்பப்படுகிறது. அந்த எஸ்எம்எஸ் அல்லது மெயில் HDFC என்பதற்கு பதிலாக HDCF என்று ஒரே ஒரு எழுத்தை மாற்றி அனுப்பப்படுகிறது. ஆனால் அதை சரியாக கவனிக்காமல் வாடிக்கையாளர்கள் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பயனாளிகள் தங்களது பான் கார்டு தகவல்களை அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தப்படுவதாக தெரிகிறது.
பான்கார்டு அப்டேட்
இதன்மூலம் HDFC வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்டு விவரங்களை தெரியாமல் அப்டேட் செய்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் திருடப்பட்டு விடும் அபாயம் உள்ளதாகவும் இதில் பலர் ஏமாந்து இருப்பதாகவும் HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிஷ்ஷிங்
பிஷ்ஷிங் (Phishing) எனப்படும் இந்த மோசடி, மீனுக்குத் தூண்டில் போடுவது போல வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்கள் மூலமே பெற்று அவர்களது மொத்த பணத்தையும் கொள்ளை அடிக்கும் ஒரு முறையாகும். இந்த மோசடியில் சிக்காமல் இருக்கும்படி வாடிக்கையாளர்களுக்கு HDFC சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அந்த அறிவுரைகள் என்னவென்று பார்ப்போம்.
அறிவுரைகள்
* அடையாளம் தெரியாதவர்கள் அனுப்பும் எஸ்எம்எஸ், இமெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம். அதோடு அதுபோன்ற எஸ்எம்எஸ், இமெயில்களை உடனே டெலிட் செய்துவிடுங்கள்.
* அடுத்து செய்ய வேண்டியது என்னவென்றால் இதுபோன்ற இமெயில் ஐடிகளை இனம்கண்டு உடனடியாக பிளாக் செய்துவிடுங்கள்.
* HDFC வங்கி குறித்த எந்தவொரு தகவலை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும்.
* எஸ்எம்எஸ், இமெயிலில் வரும் spelling-ஐ சரிபார்க்கவும். உதாரணமாக HDFC வங்கி என்பதற்கு பதிலாக HDCF வங்கி என பெரும்பாலான மோசடி பேர்வழிகள் பயன்படுத்துகின்றனர்.
விழிப்புணர்வு
மோசடி பேர்வழிகள் பல்வேறு விதங்களில் புதுப்புது முறைகளை கையாண்டு மோசடி செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் வாடிக்கையாளர்களாகிய நாம்தான் நமது பணத்தை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications