மாஸ்க் இருக்கு.. கொரோனாவை தெறிக்க விட எல்லா உபகரணங்களும் இருக்கு.. அப்புறம் எதுக்கு கவலை..!

டெல்லி: அங்க சுத்தி இங்க சுத்தி தற்போது இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ளது கொரோனா வைரஸ்.

இது சுகாதார ரீதியாக மக்களை எந்தளவுக்கு பாதிக்குமோ என்பது ஒரு புறம் பெரிய கவலையாக இருந்தாலும், மறுபுறம் ஏற்கனவே ஏழு வருடத்தில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள இந்திய பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற பயத்தினையும் உருவாக்கியுள்ளது.

சரி அத விடுங்க பாஸ். சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும். மக்கள் நல்லா இருந்தால் தானே, வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முடியும்.

தொடர்ந்து கண்கானிப்பு

தொடர்ந்து கண்கானிப்பு

இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்கானித்து வருகிறது. குறிப்பாக விமான நிலையத்தில் 5,57,431 பயணிகளையும், இதே துறைமுகங்களில் 12,431 பேரையும் கண்கானித்துள்ளதாக என்று ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

5 பேருக்கு தாக்கம்

5 பேருக்கு தாக்கம்

இவ்வாறு கண்காணிக்கப்பட்டவர்களின் 3,245 பேர்களின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பட்டதாகவும், அவற்றில் 5 நேர்மறையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், அதே நேரம் 23 பேர் காத்திருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து மாதிரிகளும் எந்த பிரச்சனைகளும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஐந்து வழக்குகள் ஏற்கனவே கேரளாவைச் இருவர் மருத்துவமனைகளில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் தற்போது டெல்லியில் ஒருவரும், தெலுங்கானவில் ஒருவரும், பெங்களூருவில் ஒருவரும் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சோதனை ஆய்வகங்கள்

சோதனை ஆய்வகங்கள்

நாட்டின் தற்போது 15 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இன்னும் 19 ஆய்வகங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 25,000 மாதிரிகள் வரை சோதனைக்கு உட்படுத்த முடியும் என்றும் வர்தன் கூறியுள்ளார்.

பயணங்களை தவிருங்கள்

பயணங்களை தவிருங்கள்

மேலும் சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான், ஈரான், கொரிய உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய மக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இல்லாத பயணங்களை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளார். அதே போல மேற்கூறிய நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்கானிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

கொரோனாவை எதிர்க்க தயார்

கொரோனாவை எதிர்க்க தயார்

நாங்கள் சர்வதேச நிலவரங்களை கண்கானித்து வருகிறோம். நிலைமைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் மற்ற நாடுகளுக்கும் மாற்றப்படலாம் என்றும் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது போதியளவு முகமூடிகள் நம்மிடம் இருக்கின்றன. தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களும் உள்ளன. மேலும் கொரோனாவை எதிர்க்க அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+