பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதியன்று எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாக இத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடும்பங்களின் நிதி சுமையை குறைக்க, மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் மருத்துவமனை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் சமீபகாலமாக கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

கிராண்ட் தோர்ன்டன் பாரத் நிறுவனத்தின் பானு பிரகாஷ் கல்மத் கூறுகையில், மருத்துவ துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், குறிப்பாக, அடிப்படை வசதிகள் கூட குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ சேவையை விரிவுப்படுத்தவும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் அளவுக்கு சுகாதார செலவினங்களை அதிகரிப்பது அவசியம். வசதிகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த முதலீடு உதவும் என்று தெரிவித்தார்.
முதியோர் உரிமைகளுக்காக போராடும் அரசு சாரா நிறுவனமான ஏஜ்வெல்லின் தன்னார்வலர்கள் கூறுகையில், மூத்த குடிமக்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், மருத்துவ ஆலோசனை நோயியல் சோதனைகளை சேர்க்க வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான தள்ளுபடி அட்டைகள், மூத்த குடிமக்களுக்கான டயப்பர்கள், மருந்துகள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற மூத்த குடிமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். மேலும் மூத்த குடிமக்களை பிஎம்ஜேஏஒய்-ல் சேர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.
சீமென்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரிஹரன் சுப்பிரமணியன் கூறுகையில், மருத்துவ சாதனங்களுக்காக இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பது, நாட்டின் புதுமை சூழல் அமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசர தேவையை வெளிப்படுத்துகிறது. மருத்துவ சாதனங்களின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்க தேவையான ஆற்றல் இங்கு உள்ளது என்று தெரிவித்தார்.
ஸ்டார் இமேஜிங் அண்ட் பாத் லேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சமீர் பாட்டி கூறுகையில், கோவிட்19 தொற்றுநோய், நோயை முன்கூட்டியே கண்டறிந்து நிர்வகிப்பதில் நோய் கண்டறிதலின் (பரிசோதனை) மதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மூன்றில் இரண்டு பங்கு பரிசோதனை வசதிகள் நகரங்களில்தான் உள்ளன.
மருத்துவ அஜண்டாவை முன்னெடுக்க நவீனமயமாகி வரும் பரிசோதனைகள் அடிப்படையானவை. நம் நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீத அளவுக்கே செலவிடுகிறது. அதேசமயம் சர்வதேச அளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சராசரி செலவினம் 2.2 சதவீதமாக உள்ளது. ஆராய்ச்சியில் முதலீடு செய்தால், துல்லியமான மற்றும் செயல்திறனுக்கான மரபணு அடிப்படையிலான சோதனை உள்ளிட்ட மாற்றத்தக்க தொழில்நுட்பங்களை கொண்டு வரக்கூடும் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications