சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்ற கருத்து பல இடங்களில் பேசப்பட்டாலும், சில நேரங்களில் ஆண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் மற்றும் அவர்களுக்கு கிடைக்காத ஆதரவுகளை பற்றி அதிகமாக பேசுவதில்லை. திருமண உறவுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகின்றன, ஆனால் அதே நேரத்தில், ஆண்கள் எதிர்கொள்ளும் அவல நிலைகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றிய மானவ் சர்மா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது இறப்புக்கு முன், சமூகத்திடம் ஆண்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதையும், அவர்களுக்கும் பாதுகாப்பு தேவை என்பதையும் உணர்த்தும் வகையில் ஒரு உணர்ச்சிவசப்பட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம், ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்பியுள்ளது.

பிப்ரவரி 24, 2025 அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனது வீட்டில் மானவ் சர்மா உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவருடைய உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மானவ் சர்மாவின் மரணத்திற்கு அவருடைய திருமண வாழ்க்கையே முக்கிய காரணம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், அவர் தனது மனைவியால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முன் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்மா தற்கொலை செய்யும் முன் தனது மொபைல் போனில் சுமார் 7 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோ பதிவுசெய்துள்ளார். அந்த வீடியோவில், அவர் மன அழுத்தம் மற்றும் விரக்தியால் சோகத்துடன் பேசுகிறார். "தயவுசெய்து, ஆண்களைப் பற்றிப் பேசுங்கள். யாராவது, எங்காவது, எப்போது எனினும் ஆண்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தியுங்கள்." "இந்தச் செய்தி காவல்துறை மற்றும் சட்ட அமைப்பிற்காக. ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை. நிலைமை இப்படியே சென்றால், நம்மைப் போன்ற ஆண்களுக்கு எதிர்காலம் இருக்காது." "நான் என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தேன்.
ஆனால் நான் என்ன செய்ய முடியும்? இனி அது ஒரு பொருட்டல்ல." "நான் இதற்கு முன் பல முறை தற்கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால் இப்போது இதை முடிக்க தீர்மானித்துள்ளேன்." வீடியோவில் அவர் மிகவும் கண்கலங்கி, தன் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டபடியே தனது முடிவை அறிவித்தார். பெரும்பாலும், ஆண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தாமல் மௌனமாக துயரத்தை தாங்கிக்கொள்கிறார்கள்.
"ஆண்கள் அழக்கூடாது" என்ற மனப்போக்கு சமுதாயத்தில் பரவலாக இருப்பதால், அவர்கள் தங்கள் வலியை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
திருமண உறவுகளில் பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகள் அதிகமாக பேசப்படுகின்றன. ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஆண்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த விஷயம் பெரும்பாலும் உளவியல், சமூக அழுத்தங்கள் காரணமாக பேசப்படாமல் மறைந்து விடுகிறது.
ஆண்கள் வலுவானவர்கள், அவர்கள் தற்காப்பு செய்து கொள்ளலாம் என்ற பொதுவான எண்ணம் சமுதாயத்தில் இருக்கிறது. இதனால், ஆண்கள் மனநலம் குறித்த பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவே அவர்களை தனிமைப்படுத்துகிறது. சர்மாவின் குடும்பத்தினர் கூறுவதற்கேற்ப, அவரது மனைவியால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தான் அவருடைய தற்கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
குடும்பத்தினர் மேலும் கூறியதாவது: அவரது மனைவி அவரை தொடர்ந்து மனஅழுத்தத்திற்க்கு உள்ளாக்கினார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தை அவரால் சமாளிக்க முடியவில்லை. இவரது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த பிறகு, அவர் முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். சம்பவம் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை சம்பவம் தொடர்பாக ஆக்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீடியோவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது..
எந்த உறவிலும் ஒருபுறமாக மட்டும் மனவெதுப்பை எதிர்கொள்வதில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்கள் அழக்கூடாது, மனவலிமை இருக்க வேண்டும் போன்ற பழைய கருத்துகளை மாற்றி, அவர்களுக்கும் மனநலம் குறித்த ஆதரவை வழங்கவேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications