ஆபரேஷன் சிந்தூர் லோகோ உருவாக இந்த 2 பேர் தான் காரணம்…

பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை அளிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கான லோகோ அனைவரின் கவனத்தையும் பெற்றது. இந்த லோகோவை வடிவமைத்தது இரண்டு ராணுவ வீரர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல் காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் . நாட்டையே கொந்தளிக்க செய்த இந்த சம்பவத்தை அடுத்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு ராஜாங்க ரீதியான நெருக்கடிகளை கொடுத்தது. பின்னர் ராணுவ ரீதியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கையில் எடுத்தது.

ஆபரேஷன் சிந்தூர் லோகோ உருவாக இந்த 2 பேர் தான் காரணம்…

கடந்த மே 7ஆம் தேதி அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தவே பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. மே 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட தாக்குதலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்திய ராணுவம் நீதி நிலைநாட்டப்பட்டது ஜெய் ஹிந்த் என பதிவிட்டு ஆபரேஷன் சிந்தூர் என்பதே இந்த ராணுவ நடவடிக்கையின் பெயர் என பதிவிட்டிருந்தது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டதோடு மட்டுமில்லாமல் அதற்கேற்ற வகையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஒரு லோகோவையும் ராணுவம் வெளியிட்டிருந்தது. பஹல்காம் தாக்குதல் தங்கள் கணவர்களை இழந்த பெண்களுக்கான ஆபரேஷன் சிந்தூர் என இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது.

இதற்கான லோகோவும் அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. கருப்பு நிற பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில்0 Sindhoorஇல் வரும் ஒரு ஓவுக்கு பதிலாக ஒரு சிறிய கின்னத்தில் சிந்தூர் இருப்பது போலவும் அது ஆங்காங்கே சிதறடிக்கப்பட்டது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

பஹல் காம் பயங்கரவாத தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் மற்றும் அதற்கான இந்தியாவின் பதில் நடவடிக்கையும் இந்தியாவின் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த லோகா இருந்தது.இந்த லோகோவை இந்திய ராணுவத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் தான் வடிவமைத்திருக்கின்றனர். ஒருவர் லெப்டினண்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றொருவர் ஹவால்தர் சுரேந்தர் சிங் ஆகும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கும் இரண்டு பெண்களே தலைமை தாங்கினர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இருவரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி வெற்றிகரமாக பயங்கரவாத முகாம்களை அழித்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+