டெல்லி: இந்தியாவில் விமானங்களில் பறக்கும் போது இனி வைஃபை வசதிகளை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக இந்தியாவிற்கு சொந்தமான விமான எல்லையில் பயணம் செய்யும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வைஃபை சேவைகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவிலான விமான சேவை தரத்தை இந்திய விமான போக்குவரத்து துறை எப்படியுள்ளது.
பொதுவாக இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யும்போது நமது செல்போன்களில் இணைய இணைப்புகள் கிடைக்காது. இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இந்திய விமான எல்லையில் பயணம் செய்யும்போது தடையற்ற இணைய வசதியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் இந்த இன் ஃப்ளைட் வைஃபை (inflight wifi)வசதி நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம் விமான பயணிகள் வைஃபை பயன்படுத்தி உலகத்தோடு தொடர்பில் இருக்கலாம்.

அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்ஃப்ளைட் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதன்முறையாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் இணைய வசதியை வழங்கியது .அதன் பிறகு அமெரிக்காவில் இயங்கக்கூடிய பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் வைஃபை சேவைகளை வழங்க தொடங்கின. 2010 ஆம் ஆண்டிலேயே டெல்டா, யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய விமானங்களில் வைஃபை பயன்படுத்தும் வாய்ப்புகளை வழங்கின.
ஐரோப்பிய நாடுகளில் செயல்படக்கூடிய விமானங்களில் 2011 ஆம் ஆண்டு முதல் வைஃபை சேவை அனுமதிக்கப்பட்டது முதன் முதலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா ஆகிய நிறுவனங்களில் வைஃபை சேவைகள் வழங்கப்பட்டன . பின்னர் ஐரோப்பிய கண்டம் முழுவதும் அனைத்து நாடுகளும் வைஃபை சேவைகளை வழங்க அனுமதித்தன.
மத்திய கிழக்கு நாடுகளில் 2011 ஆம் ஆண்டு முதல் விமானங்களில் இன் ஃப்ளைட் வைஃபை சேவைகள் வழங்கப்பட்டன. கத்தார் ஏர்வேஸ், எத்தியாட் நிறுவனங்கள் தான் தொடக்கத்தில் தங்களுடைய விமானங்களில் வைஃபை சேவைகளை வழங்கத் தொடங்கின. முதலில் இது ப்ரீமியம் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் அனைத்து பயணிகளுக்கும் என விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆசிய பசிபிக் நாடுகளை பொருத்தவரை ஜப்பான் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கேதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் 2013 ஆம் ஆண்டிலேயே வைஃபை சேவைகளை வழங்க தொடங்கி விட்டன. ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் செயல்படக்கூடிய ஏர் நியூசிலாந்து உள்ளிட்ட நிறுவனங்கள் 2017 ஆம் ஆண்டிலிருந்து வைஃபை சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது இந்தியாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் விமானங்களில் வைஃபை சேவை வழங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications