இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் கார்ப் லிமிடெட் நிறுவனம், ஞாயிற்றுகிழமையன்று ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்கள் உட்பட நாடு முழுவதும் 1500 சில்லறை விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விற்பனை நிலையங்களோடு சேர்த்து, சர்வீஸ் நிலையங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மொத்த உள்நாட்டு சில்லறை விற்பனையில் சுமார் 30 சதவீதம் பங்கு வகிக்கிறது இந்த நிறுவனம், தற்போது கடந்த வாரம் ஹரியானா மற்றும் உத்தரகாண்டில் அமைந்துள்ள தொழில்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளைத் மீண்டும் தொடங்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த நிறுவனம் தொடங்கிய பின்னர் 10,000 யூனிட்களை விற்றதாக அறிவித்துள்ளது.
பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட நாட்டின் சில பகுதிகளில், லாக்டவுனை தளர்த்துவதன் மூலம், பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை நெருங்கி வருகிறது.
இதே மற்ற முன்னணி வாகன உற்பத்தியாளர்களான மாருதி சுசூகி இந்தியா மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ஆகியவையும், தங்களது டீலர்ஷிப்புகளை திறந்து, மீண்டும் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளன.
கொரோனா லாக்டவுன் காரணமாக வாகன உற்பத்தி ஆலைகள் மற்றும் டீலர்ஷிப்கள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக விற்பனை முற்றிலும் முடங்கியிருந்தது. இந்த நிலையில் தற்போது தொடங்க உள்ள நிலையில் இனி படிப்படியாக உற்பத்தி அதிகரிக்க இது வழிவகுக்கும். அதோடு விற்பனையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாட்டில் வாகனத் துறையை மீட்டெடுக்க ஜிஎஸ்டி உட்பட பல சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். அதோடு ஆட்டோமொபைல் துறையில் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த ஸ்கிராப்பேஜ் பாலிசியை அமல்படுத்தவும், தற்போது மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் தற்போது வாகனங்களின் தேவையானது மலிவாக உள்ள நிலையில், இது மீண்டு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொருளாதார மந்த நிலை காரணமாக பலத்த அடி வாங்கினாலும், இரு சக்கர வாகன துறையானது பெரிதும் பாதிக்கப்படவில்லை எனலாம். ஆக மற்ற வாகன நிறுவனங்களை விட, கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் மீண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications