டாடா மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட சில வாகனங்கள் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பானது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆக வரவுள்ள நிதியாண்டில் வாகனங்களின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக வாகனங்கள் வாங்க திட்டமிடுவோர் அதற்கு முன்னதாக வாங்கிக் கொள்ளலாம்.
டாடா விலை அதிகரிப்பு திட்டம்
இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 1ல் இருந்து அதன் குறிப்பிட்ட சில வாகனங்கள் விலையானது 5% வரையில் அதிகரிக்கலாம் என அறிவித்துள்ளது.
குறிப்பாக அதன் வணிக வாகனங்களுக்கான விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விலை அதிகரிப்பு
இது நிறுவனம் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகனங்களின் உற்பத்தி செய்துள்ள நிலையில், அவற்றின் உற்பத்தி செலவானது அதிகரித்துள்ளது. ஆக இது விலை அதிகரிப்பானது வந்துள்ளது. இது மேற்கொண்டு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது அதன் அனைத்து வகையான வணிக வாகனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விலையேற்றம் என்பது வாகனத்தின் மாடலுக்கு ஏற்ப மாறுபடும் என அறிவித்துள்ளது.
பயணிகள் வாகனம்
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விலையை 1.2% உயர்த்தியது. இது தொடர்ந்து மூலதன செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் விலை அதிகரிப்பானது செய்யப்பட்டதாகவும் அறிவித்தது. இந்த நிலையில் தற்போது வணிக வாகனங்களுக்கான விலையும் அதிகரித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோமோட்டோ கார்ப்பும், அதன் வாகன விலையை ஏப்ரல் 1 முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்களும் அடங்கும் எனவும், இதன் விலை சுமார் 2% அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது வாகனங்களின் மாடலை பொறுத்து இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications