முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், குருகிராமில் ஒரு தற்காலிக 100 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தினை அமைக்க, குருகிராமின் மாவட்ட நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குருகிராமில் உள்ள பெண்கள் கல்லூரியில் இந்த அமைப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது கோவிட் பராமரிப்பு மையம் எங்கள் மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டபட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க முடியும்.
மிக்க மகிழ்ச்சி
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் நிவாரண நடவடிக்கைகளின் அளவை விரிவுபடுத்த உதவும் என்று, குருகிராம் துணை ஆணையர் யாஷ் கார்க் கூறினார். சமுதாயத்திற்காக தனது பங்கினை அளிப்பதில் ஹீரோ மிக மகிழ்ச்சியடைகிறது. இது அரசு மற்றும் தனியார் கூட்டாண்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளது.
நிறுவனங்கள் முன்வர வேண்டும்
இது போன்ற ஒரு சவாலான நேரத்தில் தனியார் நிறுவங்களையும், தனியார் அமைப்புகளையும் இதே போன்ற முயற்சிகளுக்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கார்க் கூறியுள்ளார்.
100 படுக்கைகள் இந்த கோவிட் பராமரிப்பு மையம் குருகிராமில் உள்ள சுகாதார உள்கட்டமைப்பை ஆதரிப்பதில், இன்னும் நீண்ட தூரம் செல்லும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூறியுள்ளது.
எங்கெங்கு?
ஹீரோ நிறுவனம் இரண்டாவது அலைக்கு எதிரான போரில் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தவிர டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு ஹீரோ ஆதரவளித்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
இயல்பு நிலைக்கு வரும்?
உண்மையில் ஒவ்வொரு நிறுவனமும் இது போன்ற நடவடிக்கைகளை, கையில் எடுத்தால், இந்தியா விரைவில் இந்த கொரோனா என்னும் மோசமான நெருக்கடியான நிலையில் வெளி வரும். இதனால் மக்களும் விரைவில் மீண்டு வர முடியும். பொருளாதாரமும் மீண்டு வரும். நிறுவனங்களும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.