2 கோடி சம்பளம் கொடுக்க ரெடி.. ஆனா ஆள் தான் கிடைக்கல..!

சம்பளத்தை கொட்டிகொடுக்கும் நிறுவனங்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் 1.5 கோடி ரூபாய் சம்பளம் என்றால் கசக்குமா என்ன? ஆனா அது அவ்வளவு ஈசியா கிடைக்குமா என்ன..? சரி அப்படி என்ன வேலை..? யார் இவ்வளவு அதிகமான சம்பளம் கொடுக்கிறார்கள்..? இவ்வளவு சம்பளம் கொடுத்தும் ஏன் ஆட்கள் பற்றாக்குறை..?

இன்றைய டெக் உலகில் அதிகம் பேசுப்படும், விவாதிக்கபடும் ஒரு தொழில்நுட்பம் என்றால் அது.... ChatGPT தான். 2022ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தால் இத்தொழில்நுட்பத்தில் கில்லி போன்ற ஆட்கள் மிகவும் குறைவு.

 2 கோடி சம்பளம் கொடுக்க ரெடி.. ஆனா ஆள் தான் கிடைக்கல..!

இதனால் ChatGPT, LLM, GENERATIVE AI பிரிவில் திறன்படைத்த ஊழியர்களுக்கு எவ்வளவும் சம்பளம் வேண்டுமானாலும் அள்ளிக்கொடுக்க தயாராகியுள்ளனர்.

இதனாலேயே கூகுள், OpenAI நிறுவனத்தில் பணியாற்றிய பலர் தங்களுடைய பணியை கடந்த 3 மாதத்தில் ராஜினாமா செய்துவிட்டு போட்டி நிறுவனத்தில் அதிகப்படியான சம்பளத்தில் பணிக்கு சேர்வது மட்டும் அல்லாமல் பலர் இத்தொழில்நுட்பம் சார்ந்து தனியாக நிறுவனத்தை துவங்கி வருகின்றனர்.

AI பிரிவில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் பிரபலமான DataBricks நிறுவனம் இந்த வாரம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான MosaicML சுமார் 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் MosaicML துவங்கி 2 வருடங்கள் மட்டுமே ஆன நிலையில் 1.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்று பெரிய தொகையை லாபமாக பார்த்துள்ளது.

இதனால் பல டெக் வல்லுனர்கள் இத்தொழில்நுட்பத்திற்குள் வர முயற்சி செய்வதோடு, சொந்தமாக நிறுவனத்தை துவங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவ்வளவு டிமாண்ட் இருக்கும் ஒரு துறையில் திறன் வாய்ந்த ஊழியர்கள் கிடைத்தால் கட்டாயம் 1.5 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அமெரிக்காவில் ChatGPT, LLM, GENERATIVE AI பிரிவில் திறன்படைத்த ஊழியர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு இருப்பது மட்டும் அல்லாமல் அரம்பமே 1,25,000 டாலர் முதல் 185000 டாலர் வரையிலான தொகையை சம்பளமாக கொடுக்கின்றனர் என அமெரிக்காவின் பிரபல Recruiting from Scratch தளம் ஆய்வில் தெரிவித்துள்ளது.

 2 கோடி சம்பளம் கொடுக்க ரெடி.. ஆனா ஆள் தான் கிடைக்கல..!

உதாரணமாக சான் பிரான்சிஸ்கோ-வை சேர்ந்த Anthropic என்ற AI நிறுவனம் மார்ச் மாதம் Prompt Engineer என்ற பணிக்கு 3,35,000 டாலர் வரையிலான தொகையை சம்பளமாக கொடுப்பதாக அறிவித்தது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 2.7 கோடி ரூபாய்.

Prompt Engineer என்றால் ChatGPT போன்ற AI Chatbot தளத்தில் எப்படி கேள்வி கேட்டால் எப்படி பதில் வருகிறது என்பதை ஆய்வு செய்து மக்களுக்கு ஏதுவாக கோடிங்-ஐ திருத்துவது தான் இந்த பணியின் அடிப்படை என கூறப்படுகிறது. Prompt Engineer பற்றி கூடுதல் தகவல் அல்லது விளக்கம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க...!!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+