இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 12 மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக மொத்த விலை பணவீக்கம் 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் இதன் அளவீடு 10.5 சதவீதமாக இருந்தது.
மேலும் மார்ச் மாதத்தில் 9.75 சதவீதமாக இருந்த மின்சாரம் மற்றும் எரிபொருள் பணவீக்கம் மே மாதத்தில் 37.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 20.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து உற்பத்தி பணவீக்கம் 9 சதவீதத்தில் இருந்து 10.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் உணவு விலை பணவீக்கமும் 7.58 சதவீதத்தில் இருந்து 8.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவு விலை பணவீக்கம் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம் பழம் மற்றும் காய்கறி பொருட்கள் நுகர்வின் அளவில் ஏற்பட்டு உள்ள மாற்றமும், லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் போக்குவரத்துச் சரியாக இல்லாத காரணத்தால் விநியோக தட்டுப்பாடு அதிகரித்ததன் மூலமும் பணவீக்கம் உயர்ந்துள்ளது.
மேலும் மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்புக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டு உள்ள விலை உயர்வும் முக்கியக் காரணமாக உள்ளது.