ஹிண்டால்கோ நிறுவனம் தனது ஜூன் காலாண்டு அறிக்கையினை புதன் கிழமையன்று அறிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில் 709 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில், வரிக்கு முந்தைய காலாண்டில் லாபம் 1,063 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமத்தினை சேர்ந்த இந்த நிறுவனம், கொரோனா நிவாரணம் மற்றும் தொண்டு பங்களிப்புகளுக்கான சிலவற்றினை பங்களித்தல் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பு காரணமாக வரிக்கு பிந்தைய லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் நோவெலிஸ் செயல்பாடுகள் காரணமாக 140 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு மூலம் கிடைக்கும் வருவாய் இந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 25,283 கோடி ரூபாயாக உள்ளது. இதே முந்தைய ஆண்டில் 29,972 ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சதிஷ் பாய், கொரோனா நெருக்கடியின் மத்தியில் பலவீனமான சூழ்நிலையை மீறி முன்னேறுவதற்கான எங்கள் திறனைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் அலுமினிய ஸ்மெல்ட்டர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான திறன் கொண்டவை. ஆக நாங்கள் எங்கள் விற்பனை அளவை பராமரித்தோம்.
கிட்டதட்ட 80% விற்பனையாகும். இது இந்த துறையில் முன்னணியில் வர வழிவகுத்தது, நாங்கள் உள்நாட்டு சந்தையிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி தேவை அதிகரித்துள்ளதை கண்டுள்ளோம்.
இதே மற்றொரு அறிக்கையில், அலுமினியம் மற்றும் காப்பரின் உலகளாவிய தலைவரான இந்த நிறுவனம், இந்தியா அலுமினிய வணிகத்தின் வலுவான வளர்ச்சியினால் உந்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறைந்த உள்ளீட்டு செலவு, செயல்பாடுகளின் நிலைத் தன்மை மற்றும் செலவு சேமிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான நான்கு வருட சாதனை வருவாய்க்கு பிறகு நோவெலிஸ் நிகர வருமானத்தை முதல் காலாண்டில் 22 மில்லியன் டாலர்களாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தின் மத்தியில் அதன் நிதி முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் மாதாந்திர தேவை அதிகரித்துள்ள நிலையில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.