அதானி குழுமத்திற்கு அதிகரிக்கும் சிக்கல்.. செபி விசாரணையில் உண்மை தெரிய வருமா?

அதானி குழுமத்தில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அதானி குழுமத்திற்கும் மூன்று வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் மோசடியான பரிவர்த்தனைகளில் தொடர்பு இருப்பதாகவும், இதில் விதில் மீறல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானிக்கும், வினோத் அதானிக்கும் 3 வெளி நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

செபி கவனம்

செபி கவனம்

இந்த சந்தேகத்தின் மத்தியில் அதானி குழுமத்தினை செபி வாரியம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, பட்டியலிடப்படாத மூன்று நிறுவனங்களும், பல்வேறு முதலீட்டு பணபரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய பயனாளி

முக்கிய பயனாளி

வினோத் அதானி இந்த ஷெல் நிறுவனங்களில் பயனடையும் ஒரு முக்கிய பயனாளி. இதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றார். அதற்கான வெளிப்படையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற நிலையில், தற்போது இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

என்னென்ன நிறுவனங்கள்?

என்னென்ன நிறுவனங்கள்?

அதானி குழுமத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் மொரிஷியஸை தளமாகக் கொண்டதாகவும் தெரிகிறது. இதில் க்ரூனல் டிரேட் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், கார்டேனியா டிரேட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், துபாயில் உள்ள எலக்ட்ரோஜன் இன்ஃப்ரா ஆகியவை தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களின் மூலம் தான் வினோத் அதானி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய சட்டப்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நேரடி உறவினர்கள், புரோமோட்டர் குழுமங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் தொடர்புடைய நபர்களாக பார்க்கப்படுகின்றனர். ஆக சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் வேறு நிறுவனங்கள் செய்யும் பரிவர்த்தனைகளை பற்றி பங்கு சந்தைக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுவும் பங்குதாரர்களின் ஒப்புதலும் வேண்டும். ஒரு வேளை சட்டத்தினை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

செபியின் கருத்து என்ன?

செபியின் கருத்து என்ன?

ஆக கடந்த 13 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் பங்கு சந்தைக்கு வராத நிறுவனங்களுடன், 3 வெளிநாட்டு நிறுவனங்கள், அதுவும் வினோத் அதானி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் இருப்பதாகவும் , இதனை அதானி குழுமம் வெளிப்படுத்தவில்லை. இந்த விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வமாக அதானி குழுமமோ, செபியோ வெளியிடவில்லை.

அதானி ஹிண்டர்ன்பர்க் விவகாரம்

அதானி ஹிண்டர்ன்பர்க் விவகாரம்

இந்த விவகாரம் தொடர்பாக அதானி குழுமம் தரப்பில், வினோத் அதானி, அதானி குழுமத்தின் உறுப்பினர் மற்றும் புரோமோட்டர் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். ஆனால் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது. அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு இந்த நடவடிக்கையானது வந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+