டெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் செபி தலைவரின் நம்பகத்தன்மையை குறைத்து அவரது பதவியை பலவீனப்படுத்த கூடும் என முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபியின் தலைவராக மாதிபி பூச் செயல்பட்டு வருகிறார். மாதபி பூச் மற்றும் அவரது கணவருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவை சேர்ந்த ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி பூச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி செய்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. முதலீட்டிற்கு மிகக் குறைந்த வரி செலுத்த வேண்டிய நாடுகளில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் அதானியின் குழும பங்குகளின் விலை முறைகேடாக உயர்த்தப்பட்டன என முதல் அறிக்கையில் கூறியிருந்தது. இந்த அறிக்கை தொடர்ந்து அதானி நிறுவன பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
அதன் பின்னர் அதானி குழும பங்குகள் படிப்படியாக மீண்டு வந்துவிட்டன. இந்த தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கூட வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தான் செபி தலைவர் மீதே பெரிய குற்றச்சாட்டை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது.
இந்த முறை ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியை நேரடியாக குற்றம் சாட்டாமல் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோரை நேரடியாக குற்றம் சாட்டுகிறது என சுட்டிக்காட்டுகிறார் முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க்.
செபி தலைவருக்கு எதிரான இந்த நேரடி குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் மீதான விசாரணையை செபி தலைவர் சரியான முறையில் நடத்துவாரா என்பது குறித்த கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது என்றும் இது மிகத் தீவிரமான ஒரு குற்றச்சாட்டு இதிலிருந்து செபி தலைவர் தன்னை பாதுகாத்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் செபி தலைவரின் நம்பகத்தன்மையை குறைத்து அந்த பதவியை பலவீனப்படுத்தப் போகிறது என்றும் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை செபி தலைவர் மறுத்துள்ளார். முதன்முதலில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட போது இந்திய பங்குச்சந்தையில் அது கடுமையாக எதிரொலித்தது. ஆனால் இம்முறை பங்குச்சந்தையிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications