உலகளவில் மிகவும் பிரபலமான ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் தனது நிறுவனத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை உட்பட பல்வேறு முக்கியமான நிறுவனங்களின் தில்லுமுல்லை இந்நிறுவனத்தின் பிரத்தியேகமான விசாரணையின் அடிப்படையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இதிலும் அதானி குழுமம் தொடர்பான அறிக்கையை வெளியிடும் போது "கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி" செய்துள்ளதாகக் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கைகள் மூலம் பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது, மட்டும் அல்லாமல் பெரும் நிதி இழப்புகளையும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, இதற்காக அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா..?
நேட் ஆண்டர்சன் கூறுகையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை நடத்துவதற்கு அதிகப்படியான பணிகள் செய்ய வேண்டியுள்ளது, இதை தன்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்பதைக் காரணம் காட்டி தற்போது நிறுவனத்தை மூடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நிறுவனத்தை மூடும் முடிவு யாருடைய அச்சுறுத்தல் காரணமாகவோ, உடல்நல பிரச்சினை காரணமாகவோ அல்லது பிற தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்படவில்லை என்றும் நேட் ஆண்டர்சன் தெளிவுபடுத்தினார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதற்கான தனது முடிவை கடந்த வருடமே நிறுவனத்தின் ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹிண்டன்பர்க் தனது பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் தனது வேலையால் மட்டுமே தனது வாழ்க்கை வரையறுக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் நேட் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
இதேபோல் நேட் ஆண்டர்சன் தனது வாழ்க்கையில் ஹிண்டன்பர்க் ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதுவதாகவும், ஆனால் இதை தன் வாழ்க்கையின் அடையாளமாக கருதவில்லை என்றும் அவர் கூறினார். இந்த முடிவை எடுத்த பின்பு தான் மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுவனம் மூட முடிவு செய்த பின்பு எங்களுடைய பைப்லைனில் உள்ள நிறுவனங்கள் தொடர்பாக இதுவரையில் நாங்கள் திரட்டிய தரவுகள், ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து அறிக்கையாக வெளியிடும் பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வந்தது. கடைசியாக போன்சி திட்டத்தை பற்றி நாங்கள் வெளியிட்ட அறிக்கையோடு எங்களுடைய பைப்லைன் முடிந்தது. இதனாலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என நேத்தன் ஆண்டர்சன் தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications