சென்னை: அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், இன்று காலையிலேயே, 'இந்தியா' விரைவில் மிகப்பெரிய விஷயம் வெளியிடப்போகிறோம் என டிவிட்டரில் தெரிவித்திருந்தது.
இந்த பதிவை சுமார் 81 லட்சம் பேர் பார்க்கும் வகையில் பெரிய அளவில் வைரலான நிலையில் 10 மணிக்கு இந்தியாவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குரூப் தொடர்பாக புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச்.

அதானி குழுமம் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கும் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டியுள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் "அதானி நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டும் எந்தவிதமான ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற அதானி குழுமத்தின் நிர்வாகத்திற்கு இருக்கும் நம்பிக்கைக்குக் காரணம் மாதபி புச்சுடன் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம்" என்று தெரிவித்துள்ளது.
"எங்கள் கணிப்புக்கு ஏற்றப்படி மாதபி புச்சு மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் வினோத் அதானி பயன்படுத்திய அதே மர்மமான பெர்முடா மற்றும் மொரிஷஸ் பண்ட் நிறுவன கட்டமைப்புகளில் பங்கு வைத்திருந்தனர் என்பது எங்களுக்குத் முன் தெரியவில்லை" என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"மாதபி புச்சு மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் 2015 ஜூன் 5 அன்று சிங்கப்பூரில் உள்ள IPE Plus Fund 1-ல் தங்கள் கணக்கைத் திறந்திருக்கிறார்கள் என்பது விசில்ப்ளோவரின் ரகசிய ஆவணங்கள் கூறுகிறது. இந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான ஆதாரமாக அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை முதலீடு செய்வதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் புச்சு தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்றும் IIFL-ல் ஒரு முக்கிய அதிகாரி கையெழுத்திட்டு உள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது" என்றும் ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, இந்தியா இன்ஃபோலைன் நிறுவனம் மூலம் இந்த IPE Plus Fund என்ற பண்ட்-ஐ தொடங்கியுள்ளார். வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமான இந்தியா இன்ஃபோலைன் நிறுவனம் வயர் கார்டு ஊழலுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வினோத் அதானி, அதானி குழுமத்திற்கு அதிக விலையில் மின் சாதனங்களை விற்பது மூலம் பணத்தை திருடி, அதனை இந்த IPE Plus Fund-ல் முதலீடு செய்து, அதன் வாயிலாக அதானி பங்குகளில் முதலீடு செய்து மறைமுகமாக அதானி பங்குகளின் விலை உயர்த்தப்பட்டது குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய தகவல், அதானி குழுமத்தின் மீதான சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் தனது முந்தைய அறிக்கையைத் தொடர்ந்து, செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குரூப் மத்தியிலான தொடர்பாகப் பற்றிய மற்றொரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது ஹிண்டன்பர்க்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications