இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைவாக உள்ளதால், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனங்கள் பணிக்கு எடுக்கும் விகிதம் 5 சதவீதம் வரை உயரும் என கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியை பெரும்பாலானவர்கள் செலுத்துக் கொண்டதால் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. 77 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைத்துள்ளன.
புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்திய நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கும் விகிதமானது 20 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அது 3 சதவீதம் அதிகரித்து 23 சதவீதமாக இருக்கும் என வேலைவாய்ப்பு இணையதளங்கள் கூறுகின்றன.
ஃப்ரெஷர்கள்
மார்ச் காலாண்டில் 10-ல் 8 ஃப்ரெஷர்களை நிறுவனங்கள் பணிக்கு எடுத்துள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையில் 85 சதவீதமும், தொலைத்தொடர்புத் துறையில் 79 சதவீதமும், இ-காமர்ஸ் துறையில் 75 சதவீதமும் ஃப்ரெஷர்களை பணிக்கு எடுத்துள்ளனர்.
இண்டீட்
கொரோனா தொற்று குறைந்துள்ளதால், வேலைவாய்ப்பு சந்தையில் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது என இண்டீட் நிறுவனத்தின் அதிகாரி சாஷி குமார் கூறியுள்ளார்.
ஊழியர்கள் மனநிலை
மேலும் இப்போது 48 சதவீத ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதையே விரும்புகிறார்கள். 31 சதவீதத்தினர் வீட்டிலிருந்தும், ஹர்பிரிட் மாடலில் வேலை செய்யவும் விரும்புகின்றனர். வரும் காலாண்டுகளில் வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். அலுவலகம் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
முக்கிய தொழில்நுட்பங்கள்
டேட்டா சையின்ஸ், அனலிட்டிக்ஸ் மற்றும் அதை சார்ந்த பிற தொழில்நுட்பங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகி அதிக தேவை உள்ளதாக கூறப்படுகிறது.
வேலைதேடுபவர்கள்
கொரோனா பரவல் காரணமாகப் பலர் வேலைவாய்ப்பை இழந்த நிலையில் இப்போது சாதகமான தவல்கள் வருவது வேலைதேடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.
வேலையின்மை விகிதம்
இந்தியாவில் வேலையின்மை விகிதம், மார்ச் மாதம் இருந்த 7.60 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 7.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு
இந்தியாவில் அதிகபட்சமாக ஹரியானாவில் வேலையின்மை விகிதம் 34.5 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் ஆறுதல் அளிக்கும் விதமாக 4.1 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications