இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதிகரிப்பு கொண்ட பகுதிகளில் லாக்டவுன் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பிற பகுதிகளை விடவும் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகள் நிறைந்த பெரு நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது நிறுவனங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வாயிலாக இந்தியாவின் டாப் 5 பெரு நகரங்களில் புதிதாக ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வெயிட் கால் ஜாப்ஸ் எனக் கூறப்படும் கார்ப்பரேட் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.
பெரு நகரங்கள்
இந்தியாவின் டாப் 5 முக்கிய பெரு நகரங்களாக விளங்கும் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் வெயிட் காலர் ஜாப்ஸ் இருந்தது. இது நாட்டின் மொத்த அளவீட்டில் கிட்டதட்ட 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பின்பு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கி வந்த நிலையில் இந்த மார்ச் மாதம் வெயிட் காலர் ஜாப் பிரிவில் கிடைக்கும் புதிய வேலைவாய்ப்புகள் மொத்தமாகத் தேக்கம் அடைந்துள்ளது என லிங்கிடுஇன் மற்றும் நேரடி வேலைவாய்ப்புத் தரவுகள் மூலம் எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
11 சதவீதம் சரிவு
பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய டாப் 5 நகரங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் எண்ணிக்கை சுமார் 11 சதவீதம் குறைந்துள்ளது. இதேவேளையில் மொத்த இந்தியாவிலும் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
கொரோனாவின் 2வது அலை
இந்தப் பாதிப்புக்கு மிக முக்கியக் காரணமாக இந்தியாவில் தற்போது உருவாகியுள்ள கொரோனாவின் 2வது அலை இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என்று Xpheno நிறுவனத் தலைவர் கமல் கார்நாத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications