மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க போகிறது. அண்மையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் 5,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதை நாம் அறிவோம். அந்த மகிழ்ச்சி அலை ஓய்வதற்குள், இப்போது நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது.
பெண்களுக்கு கிடைத்த அந்தப் பேருதவியைப் போலவே, வெயிலிலும் மழையிலும் நமக்காக உழைக்கும் விவசாய பெருமக்களுக்கு, ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசின் பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தின் கீழ் 22-வது தவணைத் தொகை ரூ. 2,000 விரைவில் வழங்கப்பட உள்ளது.

பண்டிகை காலங்களில் கை செலவுக்கு பணம் கிடைப்பது எவ்வளவு பெரிய நிம்மதி என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் தெரியும். தமிழக மகளிர் பெற்ற அந்த மகிழ்ச்சியை, இப்போது நம் ஊர் விவசாயிகளும் தங்கள் வங்கிக் கணக்கில் பெறப் போகிறார்கள். அந்தப் பணம் எப்போது வரும்? மற்ற முக்கிய அம்சங்களை விரிவாக பார்ப்போம்.
மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 22-வது தவணை தொகையை நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஹோலி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த தொகை அதற்கு முன்பே வங்கி கணக்கில் வந்து சேரும் என நம்புகின்றனர். அரசு இது குறித்து அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த தரவுகளின் படி, பிப்ரவரி கடைசி வாரத்தில் பணம் வரவு வைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. கடந்த பிப்ரவரி 2023ல் பிப்ரவரி 27ல் வழங்கப்பட்டது. இதே 2024ல் பிப்ரவரி 28ல் வழங்கப்பட்டது. 2025; பிப்ரவரி இறுதியில் வழங்கப்பட்டது. இந்த சூழலில் நடப்பு ஆண்டில் இன்னும் சில தினங்களில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் அறுவடை பணிகளுக்குத் தயாராகி வருகின்றனர். அதே சமயம் ஹோலி மற்றும் ஈத் போன்ற பண்டிகைகளும் நெருங்குவதால், இந்த 2,000 ரூபாய் ஊக்கத்தொகை அவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க பெரிய உதவியாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6,000 (மூன்று தவணைகளாக ரூ. 2,000 வீதம்) நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அதற்கு தகுதியானவர்கள் ஏற்கனவே கட்டாயம் இ-கேஒய்சி (e-KYC) மற்றும் பதிவை முடித்திருக்க வேண்டும். மேலும் பிப்ரவரி 1, 2019-க்கு பிறகு நிலம் வாங்கியவர்களுக்கு அல்லது ஒரே குடும்பத்தில் பலர் பதிவு செய்திருந்தால் பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம். விவசாயிகள் தங்கள் தவணை குறித்த சமீபத்திய தகவல்களை அறிய pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications