மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க போகிறது. அண்மையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் 5,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதை நாம் அறிவோம். அந்த மகிழ்ச்சி அலை ஓய்வதற்குள், இப்போது நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது.
பெண்களுக்கு கிடைத்த அந்தப் பேருதவியைப் போலவே, வெயிலிலும் மழையிலும் நமக்காக உழைக்கும் விவசாய பெருமக்களுக்கு, ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசின் பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தின் கீழ் 22-வது தவணைத் தொகை ரூ. 2,000 விரைவில் வழங்கப்பட உள்ளது.

பண்டிகை காலங்களில் கை செலவுக்கு பணம் கிடைப்பது எவ்வளவு பெரிய நிம்மதி என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் தெரியும். தமிழக மகளிர் பெற்ற அந்த மகிழ்ச்சியை, இப்போது நம் ஊர் விவசாயிகளும் தங்கள் வங்கிக் கணக்கில் பெறப் போகிறார்கள். அந்தப் பணம் எப்போது வரும்? மற்ற முக்கிய அம்சங்களை விரிவாக பார்ப்போம்.
மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 22-வது தவணை தொகையை நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஹோலி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த தொகை அதற்கு முன்பே வங்கி கணக்கில் வந்து சேரும் என நம்புகின்றனர். அரசு இது குறித்து அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த தரவுகளின் படி, பிப்ரவரி கடைசி வாரத்தில் பணம் வரவு வைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. கடந்த பிப்ரவரி 2023ல் பிப்ரவரி 27ல் வழங்கப்பட்டது. இதே 2024ல் பிப்ரவரி 28ல் வழங்கப்பட்டது. 2025; பிப்ரவரி இறுதியில் வழங்கப்பட்டது. இந்த சூழலில் நடப்பு ஆண்டில் இன்னும் சில தினங்களில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் அறுவடை பணிகளுக்குத் தயாராகி வருகின்றனர். அதே சமயம் ஹோலி மற்றும் ஈத் போன்ற பண்டிகைகளும் நெருங்குவதால், இந்த 2,000 ரூபாய் ஊக்கத்தொகை அவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க பெரிய உதவியாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6,000 (மூன்று தவணைகளாக ரூ. 2,000 வீதம்) நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அதற்கு தகுதியானவர்கள் ஏற்கனவே கட்டாயம் இ-கேஒய்சி (e-KYC) மற்றும் பதிவை முடித்திருக்க வேண்டும். மேலும் பிப்ரவரி 1, 2019-க்கு பிறகு நிலம் வாங்கியவர்களுக்கு அல்லது ஒரே குடும்பத்தில் பலர் பதிவு செய்திருந்தால் பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம். விவசாயிகள் தங்கள் தவணை குறித்த சமீபத்திய தகவல்களை அறிய pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications