ரூ.100 கோடிக்கும் அதிகமான விலை கொண்ட வீடுகள்.. இந்த நகரத்துல தான் அதிகமா வாங்குறாங்களாம்?

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் சந்தை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளுக்கான தேவையும் அவற்றை விரும்பி வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடுகளின் விற்பனை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக செய்தி வெளியாகியது.

ரூ.100 கோடிக்கும் அதிகமான விலை கொண்ட வீடுகள்.. இந்த நகரத்துல தான் அதிகமா வாங்குறாங்களாம்?

ஜேஎல்எல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட 49 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன என தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இவற்றின் மதிப்பு 7,500 கோடி ரூபாய் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. முன்பெல்லாம் இந்தியாவில் தனி பங்களாக்களை வாங்குவதற்கு தான் அதிக டிமாண்ட் இருந்ததாம், ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர குடியிருப்புகளுக்கான சந்தை வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கிறது.

வீடு வாங்குவோரின் போக்கு மாறி இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2025ஆம் ஆண்டிலும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட வீடுகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. 2025 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் இரண்டு மாத காலத்தில் மட்டும் இவ்வாறு நூறு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்டு நான்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 850 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட 49 வீடுகளில் 65 சதவீதம் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்த வீடுகள் என தெரிய வந்துள்ளது, பங்களாக்கள் 35 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி வரை மதிப்பு கொண்ட வீடுகளும் அடுக்குமாடி குடியிருப்புகளும் கூட தற்போது அதிகம் விற்கப்படுவதாக இந்த அமைப்பு கூறுகிறது. இதுபோன்ற அதிக விலை கொண்ட குடியிருப்புகள் அதிகபட்சமாக மும்பை மற்றும் டெல்லி என்சிஆர் ஆகிய பகுதிகளில் தான் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இருப்பவர்கள், திரையுலக பிரபலங்கள் ,ஸ்டார்ட் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் தான் இதுபோல 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடுகளை வாங்குவதாக ஜேஎல்எல் நிறுவனத்தின் தலைவர் சிவ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 49 ஆடம்பர வீடுகளில் 69 சதவீத வீடுகள் மும்பையில் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன .இந்த பட்டியலில் டெல்லி என்சிஆர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.மும்பையில் மலபார் ஹில்ஸ் மற்றும் வோர்லி ஆகிய பகுதிகளில் அதிக மதிப்பு கொண்ட வீடுகள் விற்பனை ஆகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+