கார் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் ஹோண்டா நிறுவனம், உலகளவில் தனக்கென தனி மதிப்பை பெற்று இருக்கும் நிலையில் சீனா நிறுவனங்களின் ஆதிக்கம், எலக்ட்ரிக் வாகனங்களின் வருகை ஆகியவை அதன் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்துள்ளது.
இதில் முதல் பாதிப்பாக ஹோண்டா நிறுவனம் 1948ல் துவங்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்துள்ளது அந்த நிறுவனத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த அதிர்ச்சியின் விளைவாக அடுத்தடுத்து சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்திற்கு தற்போது இருக்கும் மிக முக்கியமான டார்கெட் உற்பத்தி செலவை குறைத்து, லாபத்தை அதிகரிப்பது. 2வது புதிய வாகனங்களை தயாரித்து புதிய வாடிக்கையாளர்களை பெறுவது.
இந்த 2 முக்கிய இலக்கை அடைய ஜப்பான் நாட்டின் ஹோண்டா நிறுவனம் இந்திய நிறுவனமாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. முதல் முறையாக ஹோண்டா புதிய வாகன கட்டமைப்பை உருவாக்கும் மாபெரும் இன்ஜினியரிங் ஒப்பந்தத்தை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது.
பொதுவாக அனைத்து கார் டிசைன், கட்டமைப்புகளை ஹோண்டா தனது நிறுவனத்திற்குள்ளேயே தான் செய்யும். முதல் முறையாக வெளி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது, இந்த vehicle platform என்பது கார் தயாரிப்பின் அடிப்படை கட்டமைப்பாகும். உதாரணமாக ஹூண்டாய் K சீரியஸ் பிளாட்பார்ம் வைத்துள்ளது. இதேபோல் டாடா ARGOS, acti.ev போன்றவற்றை வைத்துள்ளது. மஹிந்திரா INGLO பிளாட்பார்ம் வைத்துள்ளது.
ஒரு vehicle platform வைத்து பல கார்களை அறிமுகம் செய்ய முடியும் என்பதால் இது ஒவ்வொரு கார் நிறுவனத்திற்கும் மிகவும் முக்கியம். இந்த vehicle platform-ல் வாகனத்தின் சேஸ், இன்ஜினியரிங் டிசைன், பவர்ட்ரைன் இணைப்பு மற்றும் இதர முக்கிய பாகங்களின் வடிவமைப்பு அடங்கும்.
இவை அனைத்தையும் ஹோண்டா நிறுவனத்திற்காக டாடா டெக்னாலஜிஸ் உருவாக்க உள்ளது, இதை விட முக்கியமான விஷயம் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் கோயம்புத்தூரில் உள்ளது என்பது தான்.
டாடா உருவாக்கும் புதிய vehicle platform பெட்ரோல், டீசல், ஹைப்ரிட், எலக்ட்ரிக் வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஏற்றதாக அமையும்.
ஆட்டோமோட்டீவ் இன்ஜினியரிங் பிரிவில் டாடா டெக்னாஜிஸ் மிகவும் கைதேர்ந்த நிறுவனமாக இருக்கும் காரணத்தால் ஹோண்டாவுக்கு நேரமும், செலவும் பெரிய அளவில் குறையும். இதனால் வர்த்தகம், மார்கெட்டிங் போன்ற வர்த்தகத்தை மேம்படுத்தும் பிற பிரிவுகளில் ஹோண்டா கவனம் செலுத்த முடியும்.
ஒரு வாகனத்தை தயாரிப்பதில் முழுக்க முழுக்க இந்திய நிறுவனத்தை நம்பி ஹோண்டா இறங்குவது இதுவே முதல் முறை என்பதால் இது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications