உலகளாவிய ஆட்டோமொபைல் துறையின் ஆதிக்க நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஜப்பான் நாட்டின் ஹோண்டா மோட்டார் நிறுவனம் மற்றும் நிசான் மோட்டார் நிறுவனம் இணைந்து செயல்பட ஒரு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்கும் திட்டங்களைத் தொடங்கியுள்ளன. ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சீனாவாலும், சீன நிறுவனங்களாலும் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை குட்ரிட்டன்ஸ் தளத்தில் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டு உள்ளோம்.
இந்த நிலையில் ஹோண்டா மோட்டார் நிறுவனம் மற்றும் நிசான் மோட்டார் நிறுவனம் இணைந்து செயல்படும் முடிவை எடுத்திருக்கும் வேளையில், சென்னை நிசான் தொழிற்சாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹோண்டா மற்றும் நிசான் தனது விற்பனை சரிவில் இருந்து மீண்டு லாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் என்பதற்காகவே இந்த மாபெரும் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் இக்கூட்டணியின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், அதிகரித்து வரும் தொழில்துறை சவால்களை திறம்பட எதிர்கொள்ளவும் உருவாக்கப்படுகிறது.
இந்த இணைப்பு வெற்றிகரமாக முடிய அனைத்து தடைகளும் உடைக்கப்படும் என ஜப்பான் ஆட்டோமொபைல் வட்டாரங்கள் கூறப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் விற்பனை அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய கார் தயாரிப்பாளராக ஹோண்டா மற்றும் நிசான் உருவெடுக்கும். முதல் இரண்டு இடத்தில் டொயோட்டா மற்றும் வோக்ஸ்வாகன் ஆகிய நிறுவனங்கள் இருக்கும்.
ஹோண்டா மற்றும் நிசான் இணைப்பு உலகளாவில் பல நன்மைகள் இருந்தாலும், இந்திய சந்தைக்கு ஒரு திக்கல் உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா மற்றும் நிசான் இரண்டு நிறுவனங்களும் சிறிய அளவிலான வர்த்தகத்தை மட்டுமே வைத்துள்ளது.
வருடம் 40 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்படும் இந்திய சந்தையில் ஹோண்டா வெறும் 1.39% சந்தைப் பங்கை மட்டுமே கொண்டுள்ளது, அதேசமயம் நிசான் வெறும் 0.73% சந்தைபங்கீட்டை மட்டுமே கொண்டு உள்ளது. இந்தியாவில் ஹோண்டா கார் தொழிற்சாலை தனிப்பட்ட முறையில் ஹோண்டாவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது, அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நிசான் அப்படியில்லை.
நிசான் நிறுவனம் சென்னை அருகே உள்ள ஓராகடத்தில் மாபெரும் தொழிற்சாலையில் தனது கார்களை தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த தொழிற்சாலையை நிசான் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தவில்லை, இதற்கு மாறாக ரெனோ உடன் இணைந்து நடத்தி வருகிறது.
வருடத்திற்கு 400,000 கார்களை தயாரிக்கும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை ஹோண்டா மற்றும் நிசான் இணைப்புக்கு பின்பு எப்படி கையாளப்படும் என்பது தான் தற்போதைய கேள்வி. நிசான் தனது கூட்டணியை உடைக்குமா அல்லது ஹோல்டிங் கம்பெனி உருவாக்கப்படுவதால் இந்த கூட்டணியின் கீழ் இயங்கி ஹோண்டா கார்களையும் இத்தொழிற்சாலையில் தயாரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிசான் சென்னை 2010 ஆம் ஆண்டு ஓராகடம் தொழிற்சாலை தொடங்கப்பட்டதிலிருந்து, 27.5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை தயாரித்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் விற்பனை செய்துள்ளது.
ரெனோ மற்றும் நிசான் இடையேயான கூட்டணி இன்னும் லாபகரமானதாக மாறவில்லை என்ற கருத்து இருக்கும் வேளையில் ஹோண்டா - நிசான் இணைப்பு செய்தி வெளியாகியுள்ளது. நிசான் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2024 நிதியாண்டில் 10% குறைந்துள்ளது, அதேசமயம் ரெனோவும் இந்தியாவில் தனது கார்களை விற்க போராடி வருகிறது.
ஹோண்டா-நிசான் இணைப்பில் ரெனோவின் ஈடுபாடு தெளிவற்ற நிலையில் இருப்பதால், ஓராகடம் தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications