தமிழ்நாடு அரசு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஓசூர் பாகலூர் பகுதியில் இடத்தை தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தது.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஓசூருக்கு அருகிலேயே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான வான்வெளி தளம் இருப்பதால் அங்கே சர்வதேச விமான நிலையத்தை அமைப்பது பொருத்தமாக இருக்காது எனக் கூறி ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஓசூர் நகரம் தொழில் ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சர்வதேச விமான நிலையம் அமைத்தால் அந்த நகரம் பொருளாதார ரீதியாக இன்னும் மேம்படும், மேற்கொண்டு பல்வேறு நிறுவனங்களும் அங்கே முதலீடு செய்வதற்கு முன் வரும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. மத்திய அரசு கூறக்கூடிய தொழில்நுட்ப ரீதியிலான காரணங்களுக்கு ஏற்ப ஹெச்ஏஎல் வான்வெளிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் ஓசூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதற்கான காரணங்கள் அடங்கிய புதிய அறிக்கையை தயாரிக்கும் பணியில் தமிழ்நாடு அரசு தற்போது ஈடுபட்டு இருக்கிறது.
இந்த சூழலில் கோவை விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபே எனப்படும் மலிவு விலை உணவு உணவகங்களை திறந்து வைப்பதற்காக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஓசூர் விமான நிலையம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்ட போது மத்திய அரசு சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு முழுமையான ஒப்புதல் தந்துவிட்டது, அதே வேளையில் ஓசூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்திருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்னர் தான் ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்து விட்டோம் என கூறிய அவர் தற்போது ஆலோசித்து வருகிறோம் என கூறி இருப்பது ஒரு பாசிட்டிவ் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதை வேளையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என கூறும் அவர் கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டெர்மினல் அங்கு கட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பான ஒப்பந்த புள்ளியை கோருவதற்கு முன்னால் முன்பாக அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது அடுத்த ஐந்து மாதங்களில் கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கிவிடும் என உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு!! வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications