ஓசூர்-க்கு ஜாக்பாட்.. அமெரிக்காவில் நடந்த கடைசி ஒப்பந்தம்.. ஸ்டாலின் செம ஹேப்பி..!!

சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் அமெரிக்காவுக்குக் கடந்த வாரம் சென்ற முதல்வர் முக.ஸ்டாலின் - அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான அணி அந்நாட்டு தொழிற்துறையினருடன் 30க்கும் அதிகமான கூட்டங்களை நடத்தியதன் மூலம் பல வெற்றிகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதல்வர் ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தை நிறைவு செய்து, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை சென்னைக்குப் புறப்பட்டார். இவருடன் அரசு அதிகாரிகள், கைடென்ஸ் தமிழ்நாடு குழுவினர் என அனைவரும் சென்னைக்குக் கிளம்பிய நிலையில், சனிக்கிழமை காலையில் சென்னையில் தரையிறங்க உள்ளனர்.

ஓசூர்-க்கு ஜாக்பாட்.. அமெரிக்காவில் நடந்த கடைசி ஒப்பந்தம்.. ஸ்டாலின் செம ஹேப்பி..!!


முக.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் சுமார் 17 நிறுவனங்களுடன் 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த 100க்கு 95 சதவீதம் நடைமுறைக்கு வரும் வகையிலும், வேகமாகச் செயல்படுத்தி முதலீடுகளைத் தமிழ்நாட்டு மண்ணுக்குக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் முக.ஸ்டாலின் முன்னிலையில் கடைசியாகக் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது என்பதால் சற்று ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ரேபிட் குளோபல் பிசினஸ் சலூஷன்ஸ் இன்க் (RGBSI) என்ற நிறுவனம், தமிழ்நாட்டின் ஓசூரில் ₹100 கோடி முதலீட்டில் நவீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிமேட்டிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை நிறுவ உள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம், அமெரிக்காவின் சிகாகோவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு இதைத் தெரிவித்தது.

ரேபிட் குளோபல் பிசினஸ் சலூஷன்ஸ் நிறுவனம் பணியாளர் மேலாண்மை, பொறியியல், மேம்பட்ட வாழ்க்கை முறை மேலாண்மை மற்றும் IT சொல்யூஷன்ஸ் என பல்வேறு வழங்குகிறது. இதோடு பல துறைகளுக்கு அட்வான்ஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளையும் வழங்குகிறது. ஓசூருக்கு 100 கோடி ரூபாய் முதலீட்டில் வருவது இத்துறையில் இருக்கும் MSME நிறுவனங்களுக்கு பெரும் பலன் அளிக்கும்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, RGBSI தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நாணுவா சிங், தலைமை அதிகாரி ரவி குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும், ரேபிட் குளோபல் பிசினஸ் சலூஷன்ஸ் நிறுவனத்திற்கும் MoU கையெழுத்தானது.

கேட்டர்பில்லர் முதலீடு: இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு அமெரிக்காவின் கட்டுமான மற்றும் பொறியியல் உபகரணங்கள் தயாரிப்பாளரான கேட்டர்பில்லர் இன்க், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தனது தற்போதைய பிரிவுகளை 500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இது தொடர்பான ஒப்பந்தம், சிகாகோவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிக அமைச்சர் டிஆர்பி ராஜா, கேட்டர்பில்லர் இன்க் இயக்குநர் பூவன் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் மூத்த துணைத் தலைவர் கிரெக் ஹெப்லர் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+