இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் வேலைக்காகப் பெரு நகரங்களுக்குப் படையெடுக்கும் நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது எனச் சமீப காலமாகப் பேசப்பட்டு வந்தாலும், எந்த நகரத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்பது முழுமையாகத் தெரியாத நிலைமை இருந்தது. தற்போது இதுகுறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் தற்போது சிறிய டவுன் மற்றும் நகரங்களில் புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இதனால் வேலைக்காகச் சென்னை, பெங்களூர் பக்கம் ஓடும் நிலை இனி இருக்காது.

சிறிய டவுன் மற்றும் நகரங்களில் அதிகரித்து வரும் நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்யப் பல நிறுவனங்கள் குறிப்பாக முன்னணி பிராண்டுகள் தங்களின் வர்த்தகத்தை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யத் துவங்கியிருக்கும் வேளையில் அனைத்து துறையிலும், அனைத்து பிரிவிலும் அதிகப்படியான ஊழியர்களின் தேவை உருவாகியுள்ளது.
இதேவேளையில் நகரங்களில் பொருளாதார மந்தநிலை, சர்வதேச அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் நிறுவனங்கள் விரிவாக்க பணிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவதால், பெருநகரங்களில் புதிய வேலைவாய்ப்புகள் அளவீடு குறைந்துள்ளது என டீம்லீஸ் சர்வீசஸ், Xpheno மற்றும் Foundit போன்ற பணியாளர் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதன் படி செப்டம்பர் காலாண்டில் ராஜ்புரா, குஷைகுடா, ஓசூர், லூதியானா, ஜோத்பூர், ஜபல்பூர், கல்வாரா, ஜிராக்பூர் ஆகிய சிறிய டவுன் மற்றும் நகரங்களில் புதிய வேலைவாய்ப்பு என்பது வருடாந்திர அடிப்படையில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நகரங்களில் ஈகாமர்ஸ், உற்பத்தி, BFSI, டெலிகாம் ஆகிய துறையில் வொயிட் காலர் மற்றும் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகியுள்ளது. மெட்ரோ நகரங்களில் இதே துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் 5 சதவீதம் சரிந்துள்ளது என டீம்லீஸ் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் அக்டோபர் மாதத்தில் சிறிய டவுன் மற்றும் நகரங்களில் உருவாகியிருக்கும் வொயிட் காலர் வேலைவாய்ப்புகளைப் பார்க்கும் போது 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது என Xpheno அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டில் உற்பத்தி துறையில் ஓசூர் அசத்தி வருவது மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பெரும்பாலான ஓசூர் நிறுவனங்கள் விரிவாக்க பணிகளில் இருக்கும் காரணத்தால் அனைத்து மட்டத்திலும் ஊழியர்களின் தேவை உள்ளது. இதேபோல் ஓசூரில் அதிகப்படியான MSME நிறுவனங்கள் இருக்கும் காரணத்தால் இந்திய உற்பத்தி துறைக்கு முதுகெலும்பாக உள்ளது.
மறுமுனையில் சேவை துறையில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் கலக்கி வருகிறது. ஐடி, டிஜிட்டல் சேவைகள், ஆட்டோமேஷன், ஐடீஸ் ஆகிய பிரிவில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்து அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications