தமிழ்நாடு அரசு ஓசூர் அருகே சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக சுமார் 2,300 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு கிரீன்பீல்டு விமான நிலைய திட்டமாக மேம்படுத்த முடிவு செய்து இதற்கான பணிகளை விரைவாக செய்து வருகிறது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 150 கிலோமீட்டருக்கு சுற்றளவு பகுதியிலும், 2033 வரையிலும் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது என்ற கட்டுபாடு இருக்கும் வேளையில் பல போராட்டங்களுக்கு பின்பு தமிழ்நாடு அரசு 4 இடங்களை சேர்வு செய்து பல கட்ட ஆய்வுகளுக்கு பின்பு ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது.

புதிய விமான நிலையம் அமைக்கப்படும் இடம் பேரிகை - பாகலூர் பகுதியில் அமைந்துள்ளது, இது பெங்களூர்- கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளி-யில் இருந்து 26.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்த விமான நிலையில் Bengaluru Satellite Town Ring Road அருகில் அமைந்துள்ளதால் பெங்களூர் - ஓசூர் மக்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்.
இந்த நிலையில் இந்த விமான நிலைய திட்டத்திற்கான இட அனுமதி (site clearance) விண்ணப்பத்தை அடுத்த இரண்டு வாரங்களில் மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது விமான நிலைய கட்டுமான திட்டத்தின் முதல் கட்ட ஒப்புதலாகும். மத்திய அரசிடம் இரண்டு கட்ட அங்கீகாரங்கள் தேவை. முதலில் இட அனுமதி, பின்னர் கொள்கை ரீதியான அனுமதி. இத்தகைய திட்டங்களுக்கான அனுமதி பெற நீண்ட காலம் தேவை என்பதால் தமிழ்நாடு அரசு விரைவாக விண்ணப்பிக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு அடுத்த நான்கு மாதங்களில் நிலம் கையகப்படுத்தல் செயல்முறையை தொடங்க திட்டமிட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் இதை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் நில வளர்ச்சி திட்டத்தை (LDP) தயாரித்து வருகிறது. இது ஒசூர் சர்வதேச விமான நிலைய திட்டத்தின் அடித்தளமாக அமையும்.
கர்நாடக அரசு பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கவும், பழைய HAL விமான நிலையத்தை செயல்படுத்தவும் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் ஆந்திர பிரதேச அரசு குப்பம் பகுதியில் விமான நிலையம் அமைக்க பரிசீலித்து வருகிறது. இது ஓசூர் மற்றும் பெங்களூருக்கு அருகில் உள்ளது.
More From GoodReturns

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications