இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பில் நாட்டின் ரியல் எஸ்டேட் துறை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வீட்டுமனை விற்பனை சுமார் 58 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது என முன்னணி ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் காலாண்டு
பிராப்ஈக்விட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஏப்ரல் - ஜூன் 2021 காலாண்டில் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைகளின் எண்ணிக்கை 45,208 ஆக மட்டுமே உள்ளது. இது கடந்த காலாண்டில் அதாவது மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் 1,08,420 ஆக உயர்ந்துள்ளது.
ரியல் எஸ்டேட் விற்பனை
இதன் மூலம் கடந்த ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த ரியல் எஸ்டேட் விற்பனை அளவு சுமார் 58 சதவீதம் சரிவடைந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் வீடு விற்பனை எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.
கொரோனா பாதிப்பு
2வது அலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள காரணத்தாலும், லாக்டவுன் விதிக்கப்பட்டு இருந்த காரணத்தாலும் வீடுகள் புக் செய்யப்பட்டாலும் பதிவு செய்யப்படும் எண்ணிக்கை பெரிய அளவில் பாதித்துள்ளது.
முக்கிய நகரங்கள்
மேலும் பெங்களூரில் 55 சதவீதம் சரிவு, சென்னையில் 59 சதவீதம் சரிவு, ஹைதராபாத்தில் 49 சதவீதம் சரிவு, கொல்கத்தாவில் 57 சதவீதம் சரிவு, மும்பையில் 63 சதவீதம் சரிவு, டெல்லி என்சிஆர் பகுதியில் 43 சதவீதம் சரிவு, புனேவில் 62 சதவீதம் சரிவு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2020 Vs 2021
ஆனால் கடந்த ஆண்டில் இதே காலாண்டை ஒப்பிடுகையில் வீடுகளின் விற்பனை அளவு நாட்டின் முன்னணி 7 நகரங்களில் மொத்த வீடு விற்பனை 51 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெறும் 29,942 ஆக இருந்த நிலையில், தற்போது 45,208 ஆகக் குறைந்துள்ளது.